Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- News கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இங்கிலாந்து கார்ப் பந்தயத்தில் அஜீத்
இங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பார்முலா-3 கார்ப் பந்தயத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக நடிகர் அஜீத்தெரிவித்துள்ளார்.
நடிகராக வருவதற்கு முன் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்த அஜீத், கடந்த சில ஆண்டுகளாக கார்ப் பந்தயங்களில்கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.
திரையுலகில் அவரது மார்க்கெட் தள்ளாட்டத்தில் இருக்கும் நிலையிலும் தொடர்ந்து ரேசில் கவனம் செலுத்தவே அஜீத்முடிவெடுத்துள்ளார்.
இந் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜீத், ஏப்ரல் மாதம் 14ம் தேதி இங்கிலாந்தில் உள்ள டானிங்டன் பார்க்கில்பார்முலா-3 கார்ப் பந்தயம் நடைபெறவுள்ளது. இதில் நானும் கலந்து கொள்கிறேன். மொத்தம் 12 போட்டிகள் கொண்டது இந்தபந்தயம்.
இந்தியாவைச் சேர்ந்த அக்பர் இப்ராகிம், கருண் சந்தக், நரேன் கார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே இதுவரை பார்லா-3 ரகபோட்டிகளில் பங்கேற்றுள்ளனர். தற்போது நானும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.
இந்தியாவில் கார்ப் பந்தயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை வெறும் விளையாட்டாக மட்டும்பார்க்காமல், வியாபாரமாகவும் கருத வேண்டும். பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே அதிக ஊக்கம் தருவதைவிட்டுவிட்டு, கார்ப் பந்தயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
கார் பந்தயம் என்னவோ பெரும் பணக்காரர்களின் விளையாட்டு என்று கருதப்படுகிறது. அது உண்மையல்ல என்பதைநிரூபிக்கவே நானும் கூட இதில் ஈடுபடுகிறேன். இந்த விளையாட்டை நம் நாட்டில் அதிக பிரபலப்படுத்த வேண்டும் என்பது தான்என் குறிக்கோள்.
கிரிக்கெட் வீரர்களைப் போல இந்த விளையாட்டுக்கும் ஊக்கம் தர வேண்டும். இப்போது கார்ப் பந்தயங்களில் தீவிர கவனம்செலுத்தப் போவதால், இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் மட்டுமே சினிமாபடப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போகிறேன்.
அதே நேரத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜனா, ஜி, அட்டகாசம் ஆகிய படங்களை முடித்துத் தந்துவிட்டுத் தான் கார்ரேசில் தீவிரமாக இறங்குவேன். கடந்த இரு ஆண்டுகளாக எந்தத் தயாரிப்பாளரிடமும் காசு வாங்கவில்லை, புதுப்படஒப்பந்தமும் போடவில்லை. இதனால் சிலர் வருத்தப்படுகிறார்கள். எக் காரணம் கொண்டும் சினிமாவை விட்டுவிடவேமாட்டேன்.
கார் ரேசில் நான் ஜெயிக்கலாம், தோற்கலாம். ஆனால், என் முயற்சி தோற்காது. எனக்கு எந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்யவந்தாலும் ஏற்பேன்.
சினிமாவில் இப்போது எந்த பொசிசனில் இருக்கிறேன் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை. நான் கடிவாளம் போட்டகுதிரை மாதிரி நேர் கோட்டில் போகிறேன். என் பக்கவாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால், குறுக்கேவந்தால் மிதித்துவிடுவேன் என்றார்.
கடந்த ஆண்டு நடந்த பி.எம்.டபிள்யூ ஏசியா கார்ப் பந்தயத்தில் அஜீத் 12வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது அவர் உபயோகித்து வரும் ரேஸ் காரில், தான் நடித்து வரும் மகா படத்திற்கு விளம்பரம் செய்யும் வகையில் மகாஎன்ற பெயரை பெரிதாக எழுதி வைத்துள்ளார்.
பேட்டியின்போது அவரது மனைவி ஷாலினியும் உடனிருந்தார்.
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு