Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாட்டுக்காக உயிர்விட்ட 12 ஜவான்களின் குடும்பத்திற்கு ரூ.1.08 கோடி அளித்த பிரபல நடிகர்
மும்பை: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் பலியான 12 ஜவான்களின் குடும்பத்தாருக்கு ரூ. 1.08 கோடி அளித்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
கடந்த சனிக்கிழமை சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜி கிராமத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 12 வீரர்கள் உயிர் இழந்தனர்.
இந்த தகவல் அறிந்து பலரும் வேதனை தெரிவித்தனர்.
அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கும் சத்தீஸ்கரில் நடந்த நக்சலைட்டு தாக்குதல் குறித்து தெரிய வந்தது. உடனே அவர் ஜெய்சல்மர் டிஐஜி அமித் லோதாவுக்கு போன் போட்டு பேசினார்.
குடும்பத்தார்
நக்சலைட்டு தாக்குதலில் பலியான ஜவான்களின் குடும்பத்தாரின் விபரங்களை சேகரித்து அளிக்குமாறு அக்ஷய் குமார் டிஐஜி லோதாவை கேட்டுக் கொண்டார்.
ரூ. 1 கோடி
பலியான 12 ஜவான்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.9 லட்சம் தர விரும்புவதாக அக்கி டிஐஜி லோதாவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு டிஐஜி மகிழ்ச்சி அடைந்தார்.
டிஐஜி
அக்ஷய் எப்பொழுதும் என்னுடன் டச்சில் இருப்பவர். சுக்மா சம்பவம் குறித்து அறிந்ததும் பலியான ஜவான்களின் குடும்பத்தாருக்கு தானாக முன்வந்து பணம் அளித்தார் என்று டிஐஜி லோதா தெரிவித்துள்ளார்.