கட்டுக்கதைகளையும் வதந்திகளையும் நம்புறாங்க.. தடுப்பூசி குறித்த உண்மையை விளக்க களமிறங்கும் ஆலியா பட்

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பலரும் கொரோனா தடுப்புப் பணிகளில் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

Recommended Video

Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கினாலும், தினசரி உயிரிழப்புகள் 4 ஆயிரத்தை தாண்டியே செல்கின்றன.

கொரோனா தடுப்பூசிகளை கண்டு மக்கள் ஏன் அஞ்சுகின்றனர் என்றும் அவர்களுக்கு விளக்கமாக அது குறித்த புரிதலை உண்டாக்க 5 எபிசோடுகள் கொண்ட தொடரை உருவாக்கியுள்ளார்.

சொல்வதை விட அதிகம்

சொல்வதை விட அதிகம்

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேல் உள்ளதாகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால், இவர்கள் சொல்வதை விட 6 முதல் 14 மடங்கு வரை இதன் பாதிப்பு இருக்கும் என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தடுப்பூசி மீது பயம்

தடுப்பூசி மீது பயம்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்காத சிலரும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர், மாரடைப்பு காரணமாகவும், ரத்தம் உறைதல் காரணமாகவும் உயிரிழப்பதாக வெளியாகும் சில அதிர்ச்சி தகவல்களால் தான் மக்களுக்கு இன்னமும் கொரோனா தடுப்பூசி மீது உள்ள அச்சம் நீங்கவில்லை.

கட்டுக்கதைகள்

கட்டுக்கதைகள்

ஆனால், அதுவெறும் கட்டுக்கதைகள் என்றும் வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் மக்கள் அதிகளவில் நம்புவதால் தான் இது போன்ற அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். மக்களுக்கு புரியும் வகையில் இதுதொடர்பான விழிப்புணர்வை செய்ய நடிகை ஆலியா பட் தற்போது முன் வந்துள்ளார்.

சந்தேகங்களை போக்க வேண்டும்

சந்தேகங்களை போக்க வேண்டும்

நகர வாசிகள் தடுப்பூசிகள் கிடைக்கவில்லையே என காத்திருக்கும் சமயத்தில், இந்திய கிராமங்களில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாமல் தடுப்பூசிகள் வீணடிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்றும் ஆலியா பட் கூறியுள்ளார். இந்த தொடருக்கு "The Intersection: Vaccinate India" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வெளியாகவுள்ள இந்த தொடரில் பல பிரபல மருத்துவர்கள் தங்களின் அனுபவங்களையும் மக்களின் சந்தேகங்களையும் போக்க உள்ளனர்.

கிராமப்புற மக்களுக்கு

நகர வாசிகள் தடுப்பூசிகள் கிடைக்கவில்லையே என காத்திருக்கும் சமயத்தில், இந்திய கிராமங்களில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாமல் தடுப்பூசிகள் வீணடிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்றும் ஆலியா பட் கூறியுள்ளார். இந்த தொடருக்கு "The Intersection: Vaccinate India" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வெளியாகவுள்ள இந்த தொடரில் பல பிரபல மருத்துவர்கள் தங்களின் அனுபவங்களையும் மக்களின் சந்தேகங்களையும் போக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X