Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கட்டுக்கதைகளையும் வதந்திகளையும் நம்புறாங்க.. தடுப்பூசி குறித்த உண்மையை விளக்க களமிறங்கும் ஆலியா பட்
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பலரும் கொரோனா தடுப்புப் பணிகளில் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கினாலும், தினசரி உயிரிழப்புகள் 4 ஆயிரத்தை தாண்டியே செல்கின்றன.
கொரோனா தடுப்பூசிகளை கண்டு மக்கள் ஏன் அஞ்சுகின்றனர் என்றும் அவர்களுக்கு விளக்கமாக அது குறித்த புரிதலை உண்டாக்க 5 எபிசோடுகள் கொண்ட தொடரை உருவாக்கியுள்ளார்.
சொல்வதை விட அதிகம்
இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேல் உள்ளதாகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால், இவர்கள் சொல்வதை விட 6 முதல் 14 மடங்கு வரை இதன் பாதிப்பு இருக்கும் என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தடுப்பூசி மீது பயம்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்காத சிலரும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர், மாரடைப்பு காரணமாகவும், ரத்தம் உறைதல் காரணமாகவும் உயிரிழப்பதாக வெளியாகும் சில அதிர்ச்சி தகவல்களால் தான் மக்களுக்கு இன்னமும் கொரோனா தடுப்பூசி மீது உள்ள அச்சம் நீங்கவில்லை.
கட்டுக்கதைகள்
ஆனால், அதுவெறும் கட்டுக்கதைகள் என்றும் வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் மக்கள் அதிகளவில் நம்புவதால் தான் இது போன்ற அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். மக்களுக்கு புரியும் வகையில் இதுதொடர்பான விழிப்புணர்வை செய்ய நடிகை ஆலியா பட் தற்போது முன் வந்துள்ளார்.
சந்தேகங்களை போக்க வேண்டும்
நகர வாசிகள் தடுப்பூசிகள் கிடைக்கவில்லையே என காத்திருக்கும் சமயத்தில், இந்திய கிராமங்களில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாமல் தடுப்பூசிகள் வீணடிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்றும் ஆலியா பட் கூறியுள்ளார். இந்த தொடருக்கு "The Intersection: Vaccinate India" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வெளியாகவுள்ள இந்த தொடரில் பல பிரபல மருத்துவர்கள் தங்களின் அனுபவங்களையும் மக்களின் சந்தேகங்களையும் போக்க உள்ளனர்.
Shared knowledge is our greatest ally in this fight against Covid-19.
— Alia Bhatt (aliaa08) May 26, 2021
Together, audiomaticIN and EternalSunProd are bringing to you a 5 part series that can help us understand the Covid-19 vaccines a little better. pic.twitter.com/VxoKg4GsF0
கிராமப்புற மக்களுக்கு
நகர வாசிகள் தடுப்பூசிகள் கிடைக்கவில்லையே என காத்திருக்கும் சமயத்தில், இந்திய கிராமங்களில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாமல் தடுப்பூசிகள் வீணடிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்றும் ஆலியா பட் கூறியுள்ளார். இந்த தொடருக்கு "The Intersection: Vaccinate India" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வெளியாகவுள்ள இந்த தொடரில் பல பிரபல மருத்துவர்கள் தங்களின் அனுபவங்களையும் மக்களின் சந்தேகங்களையும் போக்க உள்ளனர்.