Just In
- 21 min ago
'பழைய ஃபார்முக்கு வர்றேன்..' தீவிர பயிற்சியில் நடிகை தமன்னா.. வேகமாகப் பரவும் ஒர்க் அவுட் வீடியோ!
- 1 hr ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 2 hrs ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
Don't Miss!
- Automobiles
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்!
- News
கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் - வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்
- Sports
இதுவரைக்கும் இல்லாதவகையில அதிகமாக பார்க்கப்பட்ட போட்டி... 54% அதிக பார்வையாளர்கள்
- Education
ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
- Lifestyle
உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா?
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகை அல்போன்சா முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீட்டு மனு!

சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரேயுள்ள சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அல்போன்சா (வயது 32) வசிக்கிறார்.
இவரது நண்பர் நடிகர் வினோத்குமார். இவர் அல்போன்சா வீட்டில் தங்கி இருந்தார். சமீபத்தில் அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வினோத்குமார் மர்மசாவு வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக் கூடும் என்று சந்தேகிப்பதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அல்போன்சா மற்றும் அவரது சகோதரர் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, 2 பேரின் மனுவையும் நீதிபதி பொன்.கலையரசன் தள்ளுபடி செய்தார். அதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அல்போன்சா மனு தாக்கல் செய்துள்ளார்.
தான் நடித்த சினிமா படம் சம்பந்தமாக மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தற்கொலைதான் செய்துள்ளார், அவரது சாவுக்கு நான் எந்த வகையிலும் காரணமல்ல என்று அதில் அல்போன்சா தெரிவித்துள்ளார்.
எனவே குற்றமற்ற தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அதில் அல்போன்சா கோரியிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.