அமிதாப் பச்சன் 'அந்த' ட்வீட் போட்ட 20 நிமிடத்தில் இறந்த ஸ்ரீதேவி
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவி இறக்கப் போவது அமிதாப் பச்சனுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமாக இருந்த நடிகை ஸ்ரீதேவி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்பு நடிகர் அமிதாப் பச்சன் போட்ட ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ட்வீட்
என்னவென்று தெரியவில்லை ஆனால் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்பது போன்று படபடப்பாக உள்ளது என்று அமிதாப் பச்சன் ட்வீட்டியிருந்தார்.

மரணம்
அமிதாப் பச்சன் கெட்டது நடக்கப் போவது போன்று இருப்பதாக ட்வீட்டிய 20வது நிமிடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அனைவரும் அமிதாபை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

தெரியும்
நமக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது நடக்கப் போகிறது என்றால் சில நேரங்களில் நமக்கு முன்கூட்டியே தெரியும். ஏதோ நடக்கப் போகிறது என்ற ஒரு பதட்டம் ஏற்படும். அமிதாபுக்கும் அது தான் ஏற்பட்டிருக்கிறது.
வியப்பு
அமிதாப் பச்சன் ட்வீட்டை பார்த்தவர்கள் முதலில் அவருக்கு தான் உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்தனர். பின்னர் ஸ்ரீதேவி இறந்தவுடன் அவரின் ட்வீட்டை பார்த்து வியப்படைந்தனர்.


Click it and Unblock the Notifications











