Don't Miss!
- Lifestyle திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- News ஆதி முதல் அந்தம் வரை.. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும்? மேஷ ராசியின் வாழ்நாள் ராசி பலன்
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் கவுதம் மேனனுடன் கைகோர்க்கும் ஏ ஆர் ரஹ்மான்
கவுதம் மேனனும் ஏ ஆர் ரஹ்மானும் முதலில் இணைந்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பாடல்களும் படமும் செம ஹிட்.
அடுத்து அதே படத்தை இந்தியில் ரீமேக்கினார்கள். ஆனால் எதிர்ப்பார்த்த அளவு போகவில்லை.
அதன் பிறகு ரஹ்மானும் கவுதம் மேனனும் மீண்டும் சேரவே இல்லை.
கவுதம் மேனன் இளையராஜாவுடன் இணைந்து நீதானே என் பொன் வசந்தம் படம் செய்தார். அடுத்து என்னை அறிந்தால் படத்துக்காக மீண்டும் தன் பழைய பார்ட்னர் ஹாரிஸ் ஜெயராஜிடம் போனார்.
இப்போது மீண்டும் ஏ ஆர் ரஹ்மானை நாடியுள்ளார். இது சிம்பு - பல்லவி சுபாஷ் நடிக்கும் புதிய படத்துக்காக. இந்தப் படத்தை கடந்த ஆண்டே தொடங்கிவிட்டார் கவுதம். ஆனால் என்னை அறிந்தால் இயக்க வேண்டி வந்ததால், அப்படியே நிறுத்திவிட்டார். அந்தப் படத்துக்காக போடப்பட்ட டைட்டிலில் இசை ஏ ஆர் ரஹ்மான் என்றுதான் வருகிறது.
நேற்று முன்தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரஹ்மான், இணையதளத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் இதனை உறுதிப்படுத்தினார்.
என்னை அறிந்தால் வெளியானதும், இந்த சிம்பு படம் தொடங்கிவிடும். இன்னும் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயாவாக இந்தப் படம் அமையட்டும்.