Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எங்களின் அன்பை காட்டவில்லை.. நல்லா எடிட் பண்ணியிருக்காங்க.. விஜய் டிவியை விளாசிய அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா விஜய் டிவி ஆரிக்கு ஃபேவராய் எடிட் செய்திருப்பதாக விளாசியுள்ளார்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. பல இழுபறிக்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சினிமாவை மிரட்டிய கொடூர கொரோனா .. விஜய், அஜித் படங்கள் இல்லாத 2020.. சோலோவாக அசத்திய யோகிபாபு!
பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான் ஜெயிக்கும் என்று கூறிய அர்ச்சனா, தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை வைத்துக்கொண்டு குரூப்பிஸம் செய்து வந்தார்.
ஆரி மீது காண்டு
அவ்வப்போது தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்தார் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டில் சப்பாத்தி பிரச்சனை மற்றும் சாப்பாடு போடும் பிரச்சனையை ஆரி கிளப்பியதில் இருந்தே அவர் மீது செம காண்டில் இருந்துவந்தார் அர்ச்சனா.
ஏற்றிவிட்ட அர்ச்சனா
ஆரி மீது தவறே இல்லாவிட்டாலும் அவரை குறை சொல்வதையும் மற்றவர்களிடம் அவரை பற்றி பேசுவதையுமே வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆரி மற்றவர்களின் குறைகளை மட்டுமே சொல்வதாக கூறி ஏற்றிவிட்டார் அர்ச்சனா.
மானஸ்தனாக இருக்கணும்
இதனாலே மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஆரி மற்றவர்களை மட்டப்படுத்துகிறார், குறை சொல்கிறார் என்ற மெண்டல் பிளாக்குடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த கோழிப் பண்ணை டாஸ்க்கின் போது ஆரியை மானஸ்தனாக இருக்க வேண்டும் என்றும் கூறி சாடினார்.
அர்ச்சனா வெளியேற்றம்
இதனால் கடுப்பான ரசிகர்கள் அர்ச்சனாவை முதலில் வெளியேற்ற வேண்டும் என கங்கணம் கட்டினர். அதன்படியே அவருக்கு வாக்களிக்காமல் புறக்கணித்தனர். கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்ற போதும் அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
திட்டி தீர்த்த ரசிகர்கள்
அர்ச்சனா வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவை அவரது டிவிட்டர் பக்கத்தில் திட்டி தீர்த்த ரசிகர்கள் வெறுப்பை கக்கி வந்தனர்.
எல்லாத்திலும் டாப்
இதனை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களிடம் உரையாடினார் அர்ச்சனா. அப்போது பேசிய ரசிகர் ஒருவர், அர்ச்சனா சமையல், டாஸ்க் மற்றும் எண்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய விஷயங்களில் டாப்பராக இருந்தார்.
உங்களுக்கு காட்டவில்லை
ஆனால் ஆரியிடம் அன்பை காட்டுவதில் மட்டும் தோற்று விட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய அர்ச்சனா அவருக்கு அன்பு காட்டியது உங்களுக்கு காட்டப்படவில்லை. அதான் பிக்பாஸ் என பிக்பாஸ் மீது பழியை போட்டுள்ளார்.
ஒரு சீன் கூட காட்டலையா?
அர்ச்சனாவின் இந்த பதிலை பார்த்த மற்றொரு நெட்டிசன், ஓ மை காட், இது உண்மையா? 80 நாட்கள் கிளிப்பில் ஒன்னு கூட உங்க அன்பை காட்டலையா என்று கேட்டு நக்கலடித்துள்ளார்.
மோசமாக இருந்திருக்கும்
அர்ச்சனாவின் அந்த பதிவை பார்த்த மற்றொரு நெட்டிசன், ஹாஹா என சிரித்தப்படியே தவறான எடிட்டிங் என்ற தியரியை நீங்கள் சொல்வீர்கள், அவர்கள் என்னுடைய தவறை தான் காட்டினார்கள், மற்றவர்களை காட்டவில்லை என்று கூறுவீர்கள் என்பது எதிர்பார்த்ததுதான். அட கடவுளே.. நாங்கள் எல்லாத்தையும் பார்த்தோம்.. இன்னும் காட்டியிருந்தால் மோசமாக இருந்திருக்கும் என்றார்.
நல்ல எடிட்டிங் என்று கிண்டல்
அதற்கு பதில் கூறிய அர்ச்சனா, நானா தவறான எடிட்டிங் என்றேன்.. நீங்கள் தான் சொல்கிறீர்கள்.. அது நல்ல எடிட்டிங்தான்.. ஆரி புரோவுக்காக மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். நல்ல எடிட்டிங் என்று கிண்டலாக வெளியே வந்தும் ஆரியை அட்டாக் செய்துள்ளார் அர்ச்சனா. இருந்த போதும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர் ரசிகர்கள்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?