Don't Miss!
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
2 இஞ்ச் உயரம் அதிகரிக்கப் போய் வலியை வாங்கிய நடிகர்!
மும்பை: 16 ஆண்டுகளுக்கு முன்பு உயரத்தை அதிகரிப்பதற்காக ஆபரேசன் செய்த நடிகர் ஒருவர் இப்பொழுது சரிவர நடக்க முடியாமல் பாத நோயால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். தனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என்று நுகர்வோர் கமிஷனில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விளம்பரப்படங்களில் நடித்து வந்த மாடல் வினித் மேத்தா என்பவர் 5 அடி 10 அங்குலம் உயரம் இருந்துள்ளார். இவர் தனது உயரத்தை அதிகரிப்பதற்காக டெல்லியில் வசித்து வந்த ஆர்.கே. சர்மா என்ற மருத்துவரிடம் 1996 ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்.
அதற்கு கன்சல்ட்டிங் பீஸ் ஆயிரம் ரூபாய் கொடுத்து எக்ஸ்ரேவும் எடுத்துள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், நான்கு முதல் ஐந்து இஞ்ச் வரை உயரத்தை அதிகரிக்கலாம் என்றும் அதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு சம்மதித்த மேத்தா 1996 ம் ஆண்டு மே மாதம் 6 ம் தேதி தன்னுடைய உயரத்தை இரண்டு இஞ்ச் வரை உயர்த்தினார். பின்னர்தான் வினையே ஆரம்பித்தது.
டெல்லிக்கு வந்து மேத்தாவை பார்த்த அவனுடைய அம்மா, உயரம் அதிகரித்தது உனக்குப் பொருத்தமாக இல்லை. திரும்பவும் பழைய நிலைக்கே வந்து விடு என்று கூறவே மீண்டும் அதே மருத்துவரை அணுகி மறு ஆபரேசன் செய்யச் சொல்லியுள்ளார். இதனையடுத்து பழைய நிலைக்கு திரும்பினார்
மேத்தா. ஆனால் அவரால் முன்பு போல இயல்பாக நடமாட முடியவில்லை. சாதாரணமாக நடந்தாலே காலில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவரின் தவறான சிகிச்சையே தனது இந்த நிலைக்கு காரணம் என்று 1997 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தார்.
ஆனால் மருத்துவர் தரப்பிலோ சரியான சிகிச்சை மூலம்தான் ஆபரேசன் செய்யப்பட்டது என்றும் திரும்ப செய்வதற்கு 10,000 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு சிகிச்சையுமே வெற்றிகரமானதாகத்தான் முடிந்தது என்றும் மருத்துவர் தரப்பில் கூறப்பட்டது.
இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய நினைத்தால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு மேக்தாவின் வாழ்க்கை உதாரணமாகிப்போனதுதான் வேதனை.