Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அதர்வா முரளி..'பாணா காத்தாடி' பத்ரி வெங்கடேஷுக்கு முதல் படம்
சென்னை: ஈட்டி வெற்றியால் கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் அதர்வா முரளி.
இந்த நிறுவனத்தின் முதல் படத்தை பாணா காத்தாடி மூலம் நடிகர் அதர்வாவை திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார்.
திறமையான அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் அதர்வா ஆண்டுக்கு 2 பட்ஜெட் படங்களை இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்க விருக்கிறார்.
Super happy and excited about #kiickass Entertainment . It's gonna be a good year ahead. @dirbadri pic.twitter.com/NKiQacHrgL
— Atharvaa Murali (@Atharvaamurali) January 1, 2016
தனது நிறுவனத்தின் முதல் படத்தில் நடிக்கும் அதர்வா முரளி இந்தப் படத்தில் வாய்ப்பின்றி தவிக்கும் திறமையான கலைஞர்களை தமிழ்த் திரையுலகில் அறிமுகம் செய்ய எண்ணியிருக்கிறார்.
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த அதர்வா முரளிக்கு ஈட்டி மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்திருக்கிறது.இதனால் உற்சாகமாக தயாரிப்பு நிறுவனத்தில் கால் பதித்திருக்கிறார் அதர்வா.
இவர் தற்போது ருக்குமணி வண்டி வருது, கணிதன் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.