Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை: கே பாலச்சந்தர் சமரச முயற்சி
சென்னை: சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே நிலவும் பெரும் பிரச்சினையைத் தீர்க்க சமரச முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் கே பாலச்சந்தர்.
இந்த இரு அமைப்புக்கும் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த பிரச்சினை இப்போது ஈகோ மோதலாக வெடித்து வேறு கட்டத்தில் போய் நிற்கிறது.
குறிப்பாக 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைதான் இதில் முக்கிய காரணம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.
இதனால் பெப்சி அமைப்பை உடைக்கும் நோக்கில் புதிய முடிவுகளை எடுத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், மே மாதத்துக்குள் புதிய சங்கத்தை உருவாக்கப் போவதாகவும், இதற்கு தமிழ் சினிமா தொழிலாளர் சங்கம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த முயற்சியை தற்காலிகமாக தள்ளி வைக்குமாறு கேட்டு கொண்டுள்ளார் இயக்குனர் கே.பாலசந்தர். இவர் பெப்சி அமைப்பின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலச்சந்தரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கம் தனது முடிவுகளின் செயல்பாட்டை தற்காலிமாக தள்ளி தள்ளி வைப்பதாகவும், பாலச்சந்தருடன் பேசிய பிறகு இறுதி முடிவை அறிவிப்பதாகவும் அறிவித்துள்ளது.
பாலசந்தரின் சமரச முயற்சிகள் எடுபடுமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.