இந்தியப் படங்களை தடை செய்தால்தான் பாக். சினிமா பிழைக்கும்- பாக். நாளிதழ்

இதுகுறித்து பாகிஸ்தான் நாளிதழ் தி நேஷன் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலிருந்து எந்தப் படத்தையும் பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது, அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக லாகூரில் நடந்த கலைஞர்கள், பாடகர்கள், இயக்குநர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அரசு பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். இது நடந்தால்தான் பாகிஸ்தான் திரையுலகைக் காப்பாற்ற முடியும்.
பாகிஸ்தானில் உள்ள பல தியேட்டர்களில் இந்திப் படங்களை மட்டுமே திரையிடுகின்றனர். பாகிஸ்தான் படங்களை அவர்கள் திரையிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பாகிஸ்தான் திரையுலகம் நலிவடைந்து போய்க் கிடக்கிறது.
பாகிஸ்தானின் ஒவ்வொரு மூ்லை முடுக்கிலும் இந்தித் திரைப்படங்களின் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. இப்படியே போனால் பாகிஸ்தான் திரையுலகமே அழிந்து போய் விடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இந்தித் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது பாகிஸ்தான் மக்கள் இந்தித் திரைப்படங்களைத்தான் விரும்பிப் பார்க்கின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஒரு இந்திப் பட வெறியர். அதிலும் லதா மங்கேஷ்கர் குரலுக்கு இவர் கிட்டத்தட்ட அடிமை ஆவார். அவரே இதை ஒருமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











