twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிஆர்பிக்காக போட்டியாளர்களை மோதவிடும் பிக் பாஸ்: உண்மையை உளறிய 'ஓவியா'

    By Siva
    |

    சென்னை: டிஆர்பிக்காக பிக் பாஸ் போட்டியாளர்களை சண்டை போட வைப்பதை ஓவியா தெரிவித்துள்ளார்.

    பிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் ஸ்கிரிப்ட் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற பிக் பாஸ் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.

    அந்த வேலையில் ஒன்றை ஓவியா உளறிவிட்டார்.

    டாஸ்க்

    டாஸ்க்

    நேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ஓவியாவாக காயத்ரி பேச வேண்டியிருந்தது. ரைசாவாக ஓவியா பேசினார். இது போன்று தங்களுக்கு வந்த டிசர்ட்டில் உள்ள புகைப்படத்தில் இருப்பவர் போன்று அனைவரும் பேசினார்கள்.

    காயத்ரி

    காயத்ரி

    ஓவியா டிசர்ட் அணிந்திருந்த காயத்ரி அவர் போன்று நடித்துக் காட்டினார். டிஆர்பி கைஸ், டிஆர்பி வாங்க சண்டை போடலாம் என்று பிக் பாஸின் தில்லாலங்கடி வேலையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.

    நெட்டிசன்கள்

    நெட்டிசன்கள்

    டிஆர்பியை ஏற்றத் தான் போட்டியாளர்களை சின்னப்புள்ளத்தனமாக மோத விடுகிறார்கள் என்று ஆளாளுக்கு குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

    பிந்து மாதவி

    பிந்து மாதவி

    பிக் பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் பிந்து மாதவிக்கும், ஓவியாவுக்கும் இடையே நட்பு உள்ளது. அந்த நட்பால் டிஆர்பி ஏறாது என்பதால் விரைவில் அவர்கள் மோதிக் கொள்வதையும் எதிர்பார்க்கலாம்.

    English summary
    Gayathri who acted as Oviya has revealed an important secret about the Big Boss reality show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X