Don't Miss!
- Finance
இன்றும் சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. வாங்க பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்?
- News
ஆனந்த தாண்டவம்.. ஆஹா "மைனருக்கு" எதிராக பட்டுனு குதித்த ஓபிஎஸ்! பாஜக ஸ்டைலில் பாய்ச்சல்.. செம கோபம்!
- Sports
அடடே..!! தோல்விக்கு சூப்பர் காரணம் சொன்ன சஞ்சு சாம்சன்.. மீண்டு வருவோம் என நம்பிக்கை.. ஐபிஎல் டமாஷ்
- Technology
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
- Automobiles
இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பைனலை நெருங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி… அடுத்தடுத்து டாஸ்க் கொடுக்கும் பிக்பாஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 2 வாரங்களே எஞ்சி உள்ளதால், இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களின் பெயரும் நாமினேஷனில் உள்ளது.
மீண்டும்
ஒரு
சோகம்..
இயக்குநர்
பாலாஜி
சக்திவேலின்
தந்தை
காலமானார்..
பிரபலங்கள்
இரங்கல்
தற்போது பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் நிரூப் பிரியங்கா குறித்து பல கேள்விகளை கேட்கிறார்.

டிக்கெட் டு ஃபினாலே
பிக் பாஸ் டிக்கெட் டு ஃபினாலே முதல் டாஸ்கிலேயே நிரூப் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட2 வது டாஸ்கில் தாமரைக்கும் பிரியங்காவுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடி வரை சென்றது. இதில் தாமரை வைத்திருந்த முட்டை உடைந்ததாலும், அதேபோல பாவனி வைத்திருந்த முட்டை உடைந்ததாலும் இருவரும் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, நேற்று நடந்த டாஸ்கில் பிரியங்கா, ராஜூ இருவரும் வெளியேறி விட்டனர்.

வித்தியாசமான டாஸ்க்
இதையடுத்து, நேற்று டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் அடுத்தக்கட்ட போட்டி நடைபெறுகிறது. அதில், அமீர், சஞ்ஜீவ், சிபி போட்டியிடுகின்றனர். இதில் போட்டியாளர்கள் வரிசையாக கட்டம் போட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்கள் கையில் சிவப்பு மற்றும், பச்சை விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்களின் பதில்களும், பார்வையாளர்களாக இருக்கும் போட்டியை விட்டு வெளியேறியவர்களின் பதிலும் ஒன்றாக இருந்தால் ஒவ்வொரு கட்டமாக முன்னேறுவார்கள். இறுதியாக முன்னேறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

3வது ப்ரோமோ
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில்,அண்ணாச்சி இருக்கும் போது, பிரியங்கா இந்த கேம் ஷோ கலக்கப்போவது யாரு கிடையாதுனு சொல்லி இருந்தா, ஆனால், அவங்க குடும்பத்தினர் உள்ளே வந்துட்டுபோன பின்னாடி வேற மாதிரி இருக்கு என்று நிரூப் கேள்வி கேட்பது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது.

கடுப்பான ரசிகர்கள்
பிக் பாஸ் விறுவிறுப்பாக போய்ட்டு இருக்கு அதுவும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடந்துக்கிட்டு இருக்கு இந்த நேரத்தில் கொடுக்கும் டாஸ்கா இது என பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். பிசிக்கல் டாஸ்க் கொடுத்தா கேம் ரசிக்கும்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.