பிக் பாஸ் மவுசெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்: யாரை சொல்கிறார் இனியா?
சென்னை: பிக் பாஸ் மவுசு எல்லாம் சில நாட்கள் தான் என்று நடிகை இனியா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி எதிர்ப்புகளுக்கு இடையே நடந்து முடிந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு தான் பெரிய லாபம். தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
படுத்து தூங்கிய அவரின் மார்க்கெட் பிக்கப்பாகிவிட்டது.

பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு இனியாவை 4 முறை அழைத்தார்களாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டாராம்.

சும்மா
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு எல்லாம் சில நாட்கள் தான். அதன் பிறகு பழையபடி ஆகிவிடும் என்று இனியா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மவுசு
இனியாவுக்கு அழகும், நடிக்கும் திறனும் இருந்தாலும் அவருக்கு ஒரு பிரேக் கிடைக்கவில்லை. பாவம் இந்த பொண்ணுக்கு ஒர்க்அவுட் ஆகவில்லை என்று கோலிவுட்டில் சிலர் வருத்தப்படுகிறார்கள்.

ரசிகர்கள்
ஓவியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் ஓவியா ஆர்மி கிடைத்தது. ஆர்மிக்காரர்கள் ஓவியாவுடன் லைவ் சாட் செய்ய ஆவலாக உள்ளனர். ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் இருப்பது ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











