Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எல்லாரையும் நம்பி நம்பி ஏமாந்துட்டேன்... மகனை நினைத்து கண்கலங்கிய பிக் பாஸ் போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும்.
தற்போது 10வது வாரத்தின் இறுதி பகுதியில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து யார் எவிக்சன் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினத்துக்கான டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சண்டைகள் வைரலாகி வருகின்றன.
என்னடா நடக்குது அங்க.. அசீம் மீது ஏறி விளையாடும் மைனா.. ஷாக்கான பிக் பாஸ் ரசிகர்கள்!
பிக் பாஸ் 10வது வாரம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். இதனையடுத்து இந்த வாரம் யார் எவிக்சன என்ற எதிர்பார்ப்போடு பிக் பாஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே இந்த வாரம் நடைபெறும் சொர்க்கவாசிகள் - நரகவாசிகள் என்ற டாஸ்க் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டாஸ்க் ஆரம்பம் முதலே இரண்டு குழுவாக பிரிந்து விளையாடும் போட்டியாளர்கள் அடிக்கடி வார்த்தை மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
67வது நாள் ப்ரோமோ
இந்நிலையில் 67வது நாளுக்கான மூன்று ப்ரோமோக்களும் வெளியாகிவிட்டன. அதன்படி இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில், சொர்க்கவாசிகள், நரகவாசிகள் டாஸ்க்கில் ஸ்வாப்பிங் நடைபெறுகிறது. அதில், சொர்க்கத்தில் இருக்கும் ஏடிகேவை நரகத்திற்கும், அங்கிருக்கும் கதிரை மீண்டும் சொர்க்கத்திற்கு அனுப்பலாம் என அசீமும், ஷிவினும் முடிவு செய்கின்றனர். அப்போது ஏடிகேவுக்கு எமோஷனல் ஸ்டெபிலிட்டி இல்லை என சொல்லப்பட்டதால், அசீமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஏடிகே. இது ஒருகட்டத்தில் கடும் வார்த்தை மோதலாக உருவெடுத்தது.
இரண்டாவது ப்ரோமோ
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், அசீம் - ஏடிகே இடையேயான சண்டை மேலும் வலுத்தது. "நீ எப்படி என்னை அசிங்கமா கேப்பன்னு சொல்லுவ" என ஏடிகேவிடம் எகிறுகிறார் அசீம். அதற்கு "இப்படி ஒரு பாயிண்ட் பிடிச்சி, இதுக்கு சீன் போடுவார் அசீம்" என ஏடிகே கூறுகிறார். மேலும் அசீமின் ஆட்டிடியூட் பற்றி இமிடேட் செய்து காட்டினார் ஏடிகே. இது அசீமை இன்னும் சூடாக்கியதால் பிக் பாஸ் வீட்டில் இன்று ஏக களேபரங்கள் நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அழுது கண்ணீர்விட்ட ஹவுஸ்மேட்
அசீம் - ஏடிகே இடையே ஆரம்பத்தில் நல்ல நட்பு இருந்தாலும், ராஜா - ராணி கான்செப்ட்டின் போது இருவருக்கும் இடையே மோதல் உருவானது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் நண்பர்களாக வலம் வந்தனர். அசீம் கேப்டனாக இருந்த போதும், அவர் வார இறுதியில் பிரீத்தியின் கிப்ட்டை ஏடிகேவுக்கு கொடுத்து சிநேகம் வளர்த்தார். ஆனால், தற்போது இருவருக்குள்ளும் கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், "எமோஷனாலா நான் ரொம்ப வீக், யாரையும் உடனே நம்பிடுவேன்.யாராச்சும் அழுதா நம்பிடுவேன், சிரிச்சாலும் நம்பிடுவேன். இப்படி நம்பி நம்பியே எல்லாத்தையும் இழந்துட்டேன். இதுமாதிரி முட்டாள்தனமா முடிவு எடுத்ததால இன்னைக்கு என் மகன் கூட என்னோட இல்லை" என விக்ரமனிடம் அழுகிறார் ஏடிகே. இந்த ப்ரோமோ பிக் பாஸ் ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.