Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வழக்குடன் வந்த கமல்..குற்றவாளி யார்? சேஃப்பா விளையாடும் போட்டியாளர்.. தரமான சம்பவம் லோடிங்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், சேஃப்பா விளையாடிய போட்டியாளர்களை வெளுக்க சாட்டையுடன் வந்துள்ளார் கமல்ஹாசன்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க்கில் பலவிதமான குளறுபடிகள் நடந்தன.
இதையடுத்து இந்த வாரம் நீதிமன்ற டாஸ்கிற்காக பிக் பாஸ் வீடு நீதிமன்றமாக மாற்றப்பட்டது. இதில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன இதில் குறிப்பாக அமுதவாணன் விக்ரம் மீது தொடுத்த வழக்கு சுவாரசியமாக இருந்தது.
மருத்துவமனையில் ஓரிரு நாள் தங்கியிருப்பார்..கமல்ஹாசன் உடல் நிலை மருத்துவமனை அறிக்கை..பிக்பாஸ்?
கொளுத்திப்போட்ட கமல்
கடந்த வாரம் பிக் பாஸ் பாஸ் நிகழ்ச்சியில், யார் அம்பாக இருக்கிறார், யார் வில்லாக இருக்கிறார்கள் என்று கமல் கொளுத்திப் போட பல போட்டியாளர்கள் அமுதவாணன் வில், ஜனனி அம்பு எனக் கூறியிருந்தார். வீட்டில் பல போட்டியாளர்கள் அமுதவாணன் ஜனனி பெயரை சொன்னபோதும், தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக விக்ரமன் சொன்ன கருத்து என அமுதவாணன் வழக்கு தொடுத்தார்.
விக்ரம் வெற்றி பெற்றார்
இந்த வழக்கை எடுத்துக்கொண்ட அசிம் வழக்கறிஞராக சிறப்பாக வாதாடினார். இது விளையாட்டுக்கான டாஸ்க்காக இருந்த போதும் இந்த டாஸ்க்கில் ஒரு சிறந்த வழக்கறிஞராகவே செயல்பட்டு அசீம், ஒவ்வொரு பாயிண்டையும் எடுத்துவைத்தார். இருந்த போதும், இந்த வழக்கில் விக்ரம் வெற்றி பெற்றார்.
வித்தியாசமான வழக்கு
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில், பல விநோதமான, பல சுவாரசியமான வழக்குகள், பல கிண்டல் வழக்குகள் என அனைத்தும் நடைபெற்றன. நேற்று ஒரு முக்கியமான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அதாவது அந்த வழக்கின் சாராம்சம் என்னவென்றால் இந்த வீட்டில், போட்டியாளர்கள் பயன்படுத்தும் டீ கப், தட்டு போன்றவற்றை எடுக்காமல் ஆங்காங்கே வைத்துவிடுவதாக ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.
தீர்ப்பளித்த குயின்ஸி
இந்த வழக்கில் நீதிபதியாக இருந்த குயின்ஸி, இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே பொறுப்பை உணர்ந்து அவரவர்களுடைய தட்டையோ, டீ கப்பையோ கண்ட இடத்தில் போடாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், அது அனைவருடைய பொறுப்பு என்று கூறி தீர்ப்பு அளித்திருந்தார்.
வழக்குடன் வந்த கமல்
இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், அழகாக டி-ஷர்ட்டுடன் புன்னகை மன்னன் போல பளிச்சென்று நிகழ்ச்சிக்கு வந்தார் நம் உலக நாயகன் கமலஹாசன். எனக்கு ஒரு வழக்கு இருக்கு என்கிறார், அப்போது கதிரவன், பேசிக்காக ஒரு விஷயம், நம்ம சாப்பிட்டு முடிச்சதும் பிளேட்டை கழுவணும் என்கிறார். இதையடுத்து, கமல் அப்படி கழுவாமல் வெச்சிட்டு போவது யாரு? என்று கேட்டதும் அனைவரும் திருதிருவென்று முழிக்கின்றனர்.
அனைவருக்கும் வார்னிங்
குற்றவாளி எங்கே? நான் விசாரிக்கும் போது பெயராவது வந்தது, நீங்க அந்த விசாரணையைக்கூட சரியா செய்யவில்லை. இது என்னுடைய வழக்கு நீங்க இவ்வளவு சேஃப்பா விளையாடுனீங்கனா? மோஸ்ட் போரீங் சீசனாக இது மாறிவிடும் என அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு வார்னிங் கொடுத்துள்ளார்.