Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நேசிக்க கற்றுக்கொண்டேன்... கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி காதல் திருமணம்!
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.
சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டி 1992ம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.
தந்தையைப் போல இவருக்கும் நடிப்பின் மீது அவர் இருந்ததால், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவான ஹீரோ படத்தின் மூலம் நேரடியாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
நிஜத்தில் ஓர் 'காந்தாரா'...குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்திய அனுஷ்கா ஷெட்டி!
நடிகை அதியா ஷெட்டி
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Mubarakan, Nawabzaade, Motichoor Chaknachoor ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும், பல இடங்களில் ஜோடிப்புறாவாக சுற்றி வந்தனர். ஆனால், இருவரும் காதல் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்தனர்.
கே.எல்.ராகுல் -அதியா ஷெட்டி திருமணம்
இந்நிலையில், கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன், மகாராஷ்டிராவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் தடபுடலாக நடந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து புது மணத் தம்பதிகளை வாழ்த்தினர்.
நேசிக்க கற்றுக்கொண்டேன்
திருமண புகைப்படம் இணையத்தில் வெளியிட்ட கே.எல்.ராகுல், உனது வெளிச்சத்தில் நேசிக்க கற்றுக்கொண்டேன். இன்று, எங்களுக்கு வீட்டில் திருமணம் நடந்தது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் அளித்தது. நன்றியுணர்வும் அன்பும் நிறைந்த இதயத்துடன், இந்த ஒற்றுமைப் பயணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களுடன் தொடர்கிறோம் என்று பகிர்ந்து இருந்தார்.
விரைவில் வரவேற்பு
நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதை பயன்படுத்தி தனது திருமணத்தை கே.எல். ராகுல் நடத்தியுள்ளார். ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமணம் மிகவும் எளிமையாக பண்ணை வீட்டில் நடந்து முடிந்துள்ளதால், வரவேற்பு நிகழ்ச்சியை பல பிரபலங்களை அழைத்து விமரிசையாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆனகமாக ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு திருமண வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பலரும் புதுமண தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.