Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில்... பாகுபலியின் முதல் வார வசூலை வீழ்த்தியது விஜய்யின் புலி
சென்னை: விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புலி திரைப்படம், ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் வசூலை முறியடித்திருக்கிறது.
புலி படத்தை பாகுபலியுடன் பலரும் ஒப்பிட்டு வரும் நிலையில் பாகுபலி படத்தின் முதல்வார சென்னை வசூலை முறியடித்து சாதனை புரிந்திருக்கிறது விஜயின் புலி.
படம் வெளியாகி 4 தினங்கள் முடிவடைந்த நிலையில் சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 2.84 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது புலி திரைப்படம்.
புலி
விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் இவர்களுடன் இணைந்து 25 வருடங்களுக்குப் பின்பு ஸ்ரீதேவி நடித்திருக்கும் படம் புலி. ஆக்க்ஷன் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக புலியை உருவாக்கி இருந்தார் இயக்குநர் சிம்புதேவன். கடந்த 1 ம் தேதி வெளியான புலி திரைப்படம் முதல் வாரத்தில் நல்ல வசூலை ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர்.
2.84 கோடி
கடந்த 1 ம் தேதி வெளியான புலி திரைப்படம் முதல் வாரத்தில் சுமார் 2.84 கோடியை வசூலித்து இருக்கிறது என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியானது மற்றும் போட்டிப் படங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் அனைத்துத் திரையரங்களிலும் புலி படத்திற்கு 90% இருக்கைகள் நிரம்பி வழிய, புலி சென்னையில் நன்கு கல்லா கட்டி இருக்கிறது.
புலி vs பாகுபலி
ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் சென்னையில் முதல் வாரத்தில் சுமார் 1.66 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியான பாகுபலி திரைப்படம் முதல் வாரத்தில் 363 காட்சிகள் திரையிடப்பட்டு இந்த சாதனையைப் புரிந்தது. அதே நேரத்தில் தமிழில் மட்டுமே வெளியான புலி 465 காட்சிகள் திரையிடப்பட்டு 2.84 கோடிகளை பாக்ஸ் ஆபிசில் வசூலித்து இருக்கிறது. இதன் மூலம் சென்னை பாக்ஸ் ஆபிசில் பாகுபலியை வீழ்த்தி இருக்கிறது புலி.
வரும் நாட்களில்
முதல் வாரத்தில் புலி நன்றாக பாக்ஸ் ஆபிசை வேட்டியாடினாலும் வரும் நாட்களில் புலியின் ஆதிக்கம் குறைய வாய்ப்புகள் அதிகம் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை நாட்கள் இல்லாதது மற்றும் பிற படங்களின் வருகை ஆகியவற்றை இதற்கு காரணங்களாக கூறுகின்றனர்.
புலி எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்
புலி திரைப்படம் ஆன்லைனில் வெளியானது மற்றும் வரும் வாரத்தில் வெளியாகும் ருத்ரமாதேவி படம் போன்றவை புலி படத்திற்கு முன்னால் பெரும் சவால்களாகத் திகழ்கின்றன. இந்த சவால்களை முறியடித்து பாக்ஸ் ஆபிசில் வெற்றிக்கொடி நாட்டுமா புலி? பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!