Just In
- 13 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 8 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
Co Win: கோவின் செயலியில் பதிவு செய்தோருக்கே கொரோனா தடுப்பூசி
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இயக்குனரை விளாசிய சின்மயியின் அம்மா
சென்னை: சின்மயியை நளினகாந்தி படத்தில் பாடல் பாட கேட்டதற்கு அவரின் அம்மா கடுமையாக பேசியுள்ளார்.
சராசரி கதைக்களம் தயாரிப்பில் பொன் சுகிர் எழுதி இயக்கியிருக்கும் படம் நளினகாந்தி. ஜெயபாலன், கஸ்தூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சாரா தயாரித்துள்ளார். சமூகத்திற்கு கரு்தது தெரிவிக்கும் வகையில் படித்துமா பகுத்தறிவு இன்றி சாதி மோகத்தில் அலைவது என்ற பாடல் அந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.

பாடலாசிரியர், இயக்குனர் பொன் சுகிர் அவரகளுடன் கலந்துரையாடல்.
இந்தப் பாடல் உருவான கதை தான் என்ன?
நான் இந்தப் பாடலை இந்த இராகத்தில் அமைக்கவே எழுதினேன். இப்படியான சமூக நீதிப்பாடல்கள் கச்சேரிகளில் பாடப்பட வேண்டும் என எண்ணினேன். இதைப் பல பிரபல கர்நாடக சங்கீத பாடகர்களிடம் கொடுத்தேன். ஆனால் யாரும் இதைப்பாட முன் வரவில்லை. இந்தப் பாடல் கிடைத்தபின் நண்பரகளாக இருந்த பலர் என்னுடன் பேசுவதை தவிர்த்தனர்.

அப்போ எப்படித்தான் இந்தப் பாடல் உருவானது?
இந்தப் பாடலை நான் இயக்கியுள்ள நளினகாந்தி படத்தில் இடம்பெற வைக்கலாம் என முடிவு செய்தேன். அதற்காக சின்மயியை பாட வைக்கலாமென கூற பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சின்மயிடம் கேட்ட பொழுது அவரும் எந்த பதிலும் தரவில்லை. அதன் பின் அவர் அம்மாவிடம் பேசிய போது அவரோ தன் மகளை தயவு செய்து விட்டு விடுங்கள் என மிகவும் கடுமையாக பேசினார்.

கடைசியாக யார் தான் பாடினார்?
லால்குடி ஜெயராமனின் மாணவியான ஷ்ரேயா தேவ்நாத் அவர்கள் இதை மிகுந்த ஆர்வத்துடன் பாடி ஒப்பேற்றினார். அவருக்கு மிகுந்த நன்றி.

இதற்கு இசையமைத்தது?
இந்த பாட்டிற்கு மிக அருமையாக ஜூட் ஆரோகணம் இசையமைத்து மெருகூட்டியுள்ளார். ஜூட் தான் எனது நளினகாந்தி படத்தின் முழு இசையையும் அமைத்திருக்கின்றார்.

உங்கள் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்
நளினகாந்தி படம் ஒரு பிரபல வைத்தியர் மனநிலை பாதிக்கப்படும் வேளையில் அவரை பராமரிக்க வந்த பெண் படும் இன்னல்களையும் அவளுக்கு சமுதாயத்தால் ஏற்படும் தாக்கங்களையும் சித்தரிக்கும் ஒரு திரை ஓவியம். இதில் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், கவிஞர் வை ஐ ச ஜெயபாலன் அவர்களுடன் கஸ்தூரி, புவிஷா, ஷார்மிலா, ஸலீமா என பலர் நடித்திருக்கின்றனர். நளினகாந்தி என்பது ஒரு கர்நாடக இராகத்தின் பெயர். இந்த இராகம் மனநிலை பாதிக்கபட்டவர்களை குனப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது. இந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் விரைவில் வரும்.
இந்தப் பாடலைப் பற்றி?
இந்தப் பாடலை கச்சேரிகளில் பாடுமாறு நான் எல்லா கர்நாடக பாடகர்களையும் வேண்டுகிறேன். அவர்களை மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் பாடுங்கள். சமூகத்தில் இந்தப் பாடல் மாற்றம் ஏற்றபடுத்த உதவுங்கள்.

வேறு?
இந்தப் பாட்டுக்கேற்ற காணொளியையும் எவர் வேண்டுமானாலும் செய்யலாம். அதை எங்களுக்கு அனுப்பினால் pon.suhir@gmail.com நாம் அதை நமது இனையத்தளத்தில் பிரசுரிப்போம்.