Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கோவை வழக்கறிஞர்களின் 'ரூ. 1 கோடி' சவாலை ஏற்குமா அட்லீ, விஜய் அன்ட் கோ? #Mersal
Recommended Video
திருவனந்தபுரம்: சிங்கப்பூரில் இலவச மருத்துவம் செய்வதை நிரூபித்தால் அட்லீ, விஜய், வடிவேலு மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 1 கோடி அளிப்பதாக கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளார்களாம்.
மெர்சல் படத்தில் 7 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வாங்கும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிக்கப்படுவதாக விஜய் பேசியிருப்பார். இது உண்மை இல்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள மாநில தலைவர் டாக்டர் வி.ஜி. பிரதீப் குமார் கூறியிருப்பதாவது,
டார்கெட்
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொழிலை குறி வைக்கிறது மெர்சல். படத்தில் சொல்லப்பட்ட சில தகவல்கள் தவறானது. சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிப்பதாக ஒரு வசனம் உள்ளது. சிங்கப்பூரில் காஸ்ட் ஆஃப் லிவிங் மிகவும் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.
சிகிச்சை
சிங்கப்பூருக்கு பதில் இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் சிலரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். கோவையில் உள்ள சில வழக்கறிஞர்கள் மெர்சல் குழுவுக்கு ஒரு சவால் விட்டுள்ளனர்.
சவால்
சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிக்கப்படுவது உண்மை என நிரூபித்தால் அட்லீ, விஜய், வடிவேலு மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 1 கோடி தருகிறோம். இல்லை என்றால் எங்களுக்கு அவர்கள் ரூ. 1 கோடி அளிக்க வேண்டும் என்று கோவை வழக்கறிஞர்கள் குழு சவால் விட்டுள்ளது.
கருப்பு ஆடு
அனைத்து துறைகளிலும் கருப்பு ஆடு உண்டு. அதற்காக மருத்துவ துறையில் உள்ள அனைவரும் கொள்ளையர்கள் என்று படத்தில் காட்டுவதா? படத்தை எடுத்தவர்களும் மாடர்ன் சிகிச்சை முறையை நம்பியிருக்கக்கூடும்.
நெகட்டிவ்
நெகட்டிவ் விஷயங்களை மக்கள் எளிதில் பிடித்துக் கொள்வார்கள். மருத்துவ துறை குறித்த நெகட்டிவ் விஷயங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது என்றார் பிரதீப்.