Don't Miss!
- News ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
- Automobiles இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
படம் எடுத்து போண்டியானேன்..வீட்டை விற்று வாடகை வீட்டில் இருக்கிறேன்.. கண்கலங்கிய கஞ்சா கருப்பு!
சென்னை : காமெடி நடிகரான கஞ்சா கருப்பு படம் எடுத்து போண்டியானேன் என ஒரு பேட்டியில் கண்கலங்கி உள்ளார்.
2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்தே இவருடைய பெயர் கஞ்சா கருப்பு ஆனது.
பிதாமகன் படத்தைத் தொடரந்து ராம், திருடிய இதயத்தை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சிவகாசி, பம்பர கண்ணாலே, சண்டக்கோழி என பல படங்களில் நடித்தார்.
ஒருவரை உருகி உருகி காதலித்தேன்...காதலன் குறித்து கண்கலங்கி பேசிய ஷிவின்!
கஞ்சா கருப்பு
சிவகங்கை பூர்வீகமாக கொண்ட கஞ்சா கருப்பு, சிசிக்குமார் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம் படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயல்பான கதை, நடிப்புக்காக இப்படம் பெரும் வரவேற்று வணிக ரீதியாக வசூலையு வாரிக்குவித்தது. இத்திரைப்படத்தில் காசி என்ற ரோலில் நடித்து ஸ்கோர் செய்திருந்தார் கஞ்சா கருப்பு.
முன்னணி நடிகர்களின் படங்களில்
விக்ரம், சூர்யா, விஜய், ஜீவா, தனுஷ், விஷால்,சசிக்குமார், அருண்விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள கஞ்சா கறுப்பு 2010ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடனாளி ஆனேன்
ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வந்த கஞ்சா கருப்பு , 2014ம் ஆண்டு வேல் முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்தார். ஆனால், படம் சரியாக ஓடாததால், கையில் இருந்த அனைத்து பணத்தையும் இழந்து கடனாளி ஆனார். இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கே இவரால் தாக்குபிடிக்க முடியாததால், 14 நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.
படம் எடுத்து போண்டியானேன்
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கஞ்சா கருப்பு, படம் தயாரித்து மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு பலர் ஆலோசனை சொன்னார்கள். நான் அதை கேட்கவில்லை. கையில் இருந்த பணம் கரைந்து போயி படம் பாதி முடிந்தபோதுதான் எனக்கு எல்லாமே தெரிந்தது. தயாரிப்பாளர் கஞ்சா கருப்புக்கு எதையும் தாங்கும் இதயம் என்று என் படத்தின் இயக்குநர் என்னிடம் கூறினார்.
வீட்டை விற்றுவிட்டேன்
நான் சினிமாவிற்குள் நுழைய நிறைய கஷ்டப்பட்டு, இறுதியில் பட வாய்ப்புகள் வந்து உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய பாலா - அமீர் இல்லத்தை விற்று படம் தயாரித்தேன். இப்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில் இருக்கிறேன். இயக்குநர் சொன்னது போல எனக்கு எதையும் தாங்கும் இதயம் இருப்பதால் வீடு போனதை பற்றி கவலைப்படவில்லை என்றார் கஞ்சா கருப்பு.