Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"வீடு நிரப்பும் போராட்டம் நீ".. அழகான வரிகளில்.. கருணாகரனின் கொரோனா கவிதை
சென்னை : கண்ணுக்குப் புலப்படாமல் உலகெங்கிலும் பெரும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றியொரு கவிதையை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கருணாகரன்.
சிம்பு நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், 'வல்லவன்' வெற்றித் திரைப்படத்தில் இடம் பெற்ற 'காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்' என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கருணாகரன், அதைத் தொடர்ந்து அலெக்ஸ் பாண்டியன், சென்னை28 பார்ட் 2, சக்க போடு போடு ராஜா, பேரன்பு, பார்ட்டி, நிசப்தம், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் வைகைப்புயல் வடிவேலு, டான்ஸ் மாஸ்டர் சாண்டி போன்ற பல சினிமா பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர். அந்த வகையில் கருணாகரனும் தனது கொரோனா கவிதையை வெளியிட்டு உள்ளார். அந்த கவிதையில், '' சுதந்திர இந்தியாவில் அரசுகள் நடத்தும் வீடு நிரப்பும் போராட்டம் நீ" என மிக அழகான வரிகளில் கூறியுள்ளார் கருணாகரன்.
இந்தா கிளம்பிட்டாங்கள்ல.. அஜித்.. விஜய் ரசிகர்களை தொடர்ந்து கோதாவில் குதித்த தனுஷ் ரசிகர்கள்!
இந்த கவிதை வரிகள் அனைவராலும் பேசப்பட்டு, அனைவரையும் பெரும் அளவில் கவர்ந்துள்ளது. கொரோனா பீதி நாளுக்கு நாள் ஒரு பக்கம் குறைந்தாலும், மறு பக்கம் தனது விஸ்வரூபத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மக்கள் அனைவரையும் பாதுகாக்க அரசாங்கம் பல முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரதையும் பொருட்படுத்தாமல் பல சட்டங்களையும், உதவிகளையும் செய்து தான் வருகிறார்கள். சினிமா பிரபலங்கள் மட்டும் இல்லாமல் பொது மக்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வதுடன், அரசாங்கம் சொல்வதை கேட்டு வீட்டிலேயே இருக்கின்றனர். ஆனால், அரசாங்கம் சொல்வதை கேட்காமல் அலட்சியமாக இருக்க தான் செய்கிறார்கள். கேரம் போர்டு மற்றும் கிரிக்கெட் விளையாடும் புல்லிங்கோஸ் வீடியோக்கள் இதற்கு ஒரு உதாரணம்.
மக்களின் அலட்சிய போக்கு மாற வேண்டும் என்று பலரும் தங்களது பங்கிற்காக பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கம் சொல்வதை கடைபிடித்து கொரோனா என்ற கொடிய அரக்கனை அழிக்க வேண்டும் என்பது தான் இந்த கருணாகரனின் கவிதை வற்புறுத்துகிறது.