Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்ட்ரைக்கை மீறி வெளியான ஒரே ஒரு தமிழ் படம்!
Recommended Video
சென்னை : டிஜிட்டல் திரைப்பட ஒளிபரப்புக்கான QUBE மற்றும் UFO கட்டண உயர்வை கண்டித்து நேற்று முதல் புதிய படங்கள் எதுவும் வெளிவராது என்ற தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அதோடு இந்த முடிவை மீறி நடக்கும் தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.
இதனால் இன்று வெளிவருவதாக இருந்த சில படங்கள் தள்ளி வைக்கப்பட்டன. அதையும் மீறி 'சூரியன்', 'இந்து' போன்ற படங்களின் இயக்குனர் பவித்ரன் இயக்கி, தயாரித்துள்ள 'தாராவி' படம் இன்று வெளியாகி உள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பவித்ரன் மகன் அபய் இசை அமைத்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்த்தின் அறிவிப்பை மீறி படம் வெளியிட்டது குறித்து பவித்ரன் கூறியிருப்பதாவது, "தாராவி படத்தை மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி தயாரித்துள்ளேன். பட வெளியீட்டு தேதி முன்பே தீர்மானிக்கப்பட்டது. இன்று வெளிவராவிட்டால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.
இந்த மாத இறுதியில் பெரிய படங்கள் வெளிவருகிறது. அதோடு என்னால் போட்டி போட முடியாது. அதனால் இப்போது வெளியிடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. பட வெளியீட்டுக்கு உதவுவோம், துணையாக இருப்போம் என்ற எந்த உத்தரவாதத்தையும் தயாரிப்பாளர் சங்கம் தரவில்லை" எனக் கூறியிருக்கிறார் பவித்ரன்.