Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமா ஆசையில் வெறும் 500 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுந்தர் சி. ஹீரோயின்
Recommended Video
மும்பை: நடிகை திஷா பதானி கையில் வெறும் 500 ரூபாயுடன் மும்பை வந்துள்ளார்.
டோணி படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அவர் தனது காதலரான டைகர் ஷ்ராஃபுடன் சேர்ந்து நடித்த பாகி 2 படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் திஷா மகிழ்ச்சியில் உள்ளார்.
சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் நடிக்க காத்திருக்கிறார் திஷா. இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறியதாவது,
படங்கள்
நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவள். அதனால் என் படங்கள் ஓடுமா, அடுத்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. எனவே நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிடிக்கும்
எனக்கு நடிக்க பிடிக்கும். மீண்டும் மீண்டும் நடிக்க வாய்ப்பு பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு படம் துவங்கும் நேரத்தில் என்னை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நடிக்க வைத்தார்கள். அது தான் நான் அறிமுகமாகவிருந்த படம்.
வாய்ப்பு
படங்களில் நிராகரிக்கப்படும்போது அது நமக்கு பலத்தை கொடுக்கிறது. பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை அளிக்கிறது. நான் பாசிட்டிவான ஆள்.
படிப்பு
நான் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு மும்பைக்கு தனியாக வந்தேன். கையில் வெறும் 500 ரூபாயுடன் வந்தேன். அந்த பணமும் செலவாக கையில் காசு இல்லாமல் அல்லாடி இருக்கிறேன்.
பணம்
மும்பைக்கு வந்த புதிதில் வீட்டு வாடகை கொடுக்க வேண்டுமே என்பதற்காக விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். வேலைக்கு செல்வேன், சம்பாதிப்பேன், வீட்டிற்கு வந்து தூங்குவேன். இது தான் ஒரு காலத்தில் என் வாழ்க்கையாக இருந்தது என்கிறார் திஷா.