Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகும் தௌலத்
போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து இன்னும் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு தௌலத் என்று தலைப்பிட்டுள்ளனர்.
ரைட் ஆர்ட்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக முகம்மதுஅலி, சசிகலா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார் சஞ்சய்சிவன்.
இவர் ஏற்கனவே கோட்டி, ஆண்டவப்பெருமாள் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அத்துடன் "பணவாசி"என்ற கன்னட படம் ஒன்றிலும் நாயகனாக நடித்திருக்கிறார்.
நாயகியாக ரேஷ்மி கெளதம் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் ஜெயபாலன், ஐசக், யோகிபாபு, வைரவன், அஜெய்பிரபு, ஏ.கே.எஸ், சலா , விஜய் மணி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ பி இமாலயன் இமாலயன் இசையமைக்கிறார்.
படம் குறித்து சஞ்சய் சிவன் கூறுகையில், "எதிர் கால உலகையே பயமுறுத்தும் அதிநவீன ஆயுதமான போதை கடத்தலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.
தௌலத், அலெக்ஸ் என்ற இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணிதான் கதை! தங்கத்தை விட உயர்ந்த விலை கொண்ட போதை பொருள் பெங்களூர் வழியாக சென்னைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எப்படி கடத்தப் படுகிறது என்பதை ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளோம்.
படப்பிடிப்பு பெங்களூர், சென்னை, ஊட்டி மற்றும் கர்நாடக மாநிலம் உத்தர கர்நாடகாவின் சிரிசி என்ற இடத்திலும் நடிபெற்றுள்ளது," என்றார்.