ஆரவ்தான் வெற்றியாளர் - லேப்டாப்பை தூக்கிப் போட்டு உடைத்த ரசிகர்! - வைரலாகும் வீடியோ
சென்னை : தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பிக்பாஸ் போட்டியின் முதல் சீசன் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் 4 பேரில் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் ஆரவ் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிக்பாஸ் ட்ராஃபியை பெற்றுக்கொண்டார்.

வெற்றியாளர் ஆரவ் என அறிவிக்கப்பட்டதும் ஓவியா உள்பட பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரத்தோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் அப்-பாக கவினர் சினேகன் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சினேகன் வெற்றியாளராக அறிவிக்கப்படாததால் அவரது ரசிகர் ஒருவர் லேப்டாப்பைத் தூக்கிப் போட்டு உடைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. இது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சினேகன் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என அந்த ரசிகர் எதிர்பார்த்த நிலையில், ஆரவ் அறிவிக்கப்பட்டதும் ஆவேசமாக டி.வி-யைத் தூக்கி உடைக்கப் போகிறார். நண்பர்கள் கத்தவும், அதை வைத்துவிட்டு லேப்டாப்பைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார்.


Click it and Unblock the Notifications











