Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு எதிரான கருத்து: கே.ஜே.யேசுதாஸ் மீது வழக்குப்பதிவு!
திருவனந்தபுரம்: பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான கே.ஜே.யேசுதாஸ் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காந்திஜெயந்தி தினத்தன்று திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய விழாவில் கலந்து கொண்டு பேசிய யேசுதாஸ், "பெண்கள் ஜீன்ஸ் அணிவதனால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைத்தே இருக்க வேண்டும். இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது" என்று பேசினார்.
யேசுதாஸின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாநிலம் முழுவதும் எதிர்ப்பைப் பெற்றும் வரும் அந்தக் கருத்திற்காக, மகிளா காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்தினர். பிறகு பேரணியாகச் சென்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
சமூக வலை தளங்களில் யேசுதாஸின் குடும்பப் பெண்கள் ஜீன்ஸ் உடைகள் அணிந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கிண்டலடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மகிளா காங்கிரசார் அளித்த புகாரின் பேரில் கே.ஜே.யேசுதாஸுக்கு எதிராக கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.