twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வாரம் டேன்ஞர் ஜோனில் இருக்கும் நான்கு பேர்...இந்த வாரமும் ட்விஸ்ட் இருக்குமா ?

    |

    சென்னை : விஜய் டிவி.,யில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 தமிழ் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது. ஏற்கனவே 18 போட்டியாளர்களில் முதல் வாரத்தில் நமீதா மாரிமுத்துவும், இரண்டாவது வாரத்தில் நாடியா சாங்கும் வெளியேறி விட்டனர்.

    தற்போது மூன்றாவது வாரத்தில் வெளியேற போகிறவருக்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் தாமரைச் செல்வி, இசைவாணி, அக்ஷரா, பாவனி ஆகிய 4 பேர் காப்பாற்றப்படுவதாக நேற்றே கமல் அறிவித்து விட்டார்.

    தெறிக்க விட்ட கமல்

    தெறிக்க விட்ட கமல்

    நேற்றைய சனிக்கிழமை எபிசோட்டில் பிரியங்கா மற்றும் அபிஷேக் ராஜாவை, கமல் கேள்விகளால் வறுத்தெடுத்தார். செய்த தவறுகளை மறைத்து, பல காரணங்கள் சொல்லி சமாளித்து தப்பிக்க முயற்சித்தாலும் கமல் விடாமல், நக்கல் கலந்த பல கேள்விகள், விமர்சனங்களை கூறி அவர்களை தெறிக்க விட்டார்.

    வரவேற்ற ரசிகர்கள்

    வரவேற்ற ரசிகர்கள்

    பிரியங்கா மற்றும் அபிஷேக்கை துருவி துருவி கேட்டு, கமல் திணறடித்தது ரசிகர்களை பெரிய அளவில் ரசிக்க வைத்தது. தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறி விட்டதை போல் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    காப்பாற்றப்பட்ட ஐக்கி

    காப்பாற்றப்பட்ட ஐக்கி

    இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோவில், ஐக்கி பெர்ரி காப்பாற்றப்படுவதாக கமல் கூறுகிறார். இதனால் தற்போது 4 பேர் டேன்ஞர் ஜோனில் உள்ளனர். இருந்தாலும் கைப்பற்ற நாணயங்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. அவை எவிக்ஷனில் மிகப் பெரிய மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சூசகமாக சொன்னார் கமல்.

    டேன்ஞர் ஜோனில் இருப்பவர்கள்

    டேன்ஞர் ஜோனில் இருப்பவர்கள்

    தற்போதைய நிலவரப்படி பிரியங்கா, அபிஷேக், சின்ன பொண்ணு, அபினய் ஆகிய நான்கு பேர் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள். இவர்களில் விஜய் டிவி.,யில் புகழ்பெற்ற தொகுப்பாளரான பிரியங்காவே டேன்ஞர் ஜோனில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருந்தாலும் அவர் எப்படி காப்பாற்றப்படுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    ட்விஸ்ட் இருக்குமா

    ட்விஸ்ட் இருக்குமா

    இந்த வாரம் வெளியேற போவது அபிஷேக் ராஜா தான். அவர் நேற்று இரவே வெளியேறி விட்டார் என தகவல் கசிந்து விட்டது. இருந்தாலும் இன்று நிஜமாகவே அபிஷேக் தான் வெளியேற போகிறாரா அல்லது கடைசி நிமிடத்தில் ஏதாவது ட்விஸ்ட் இருக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனெனில் கடந்த வார நாமினேஷின் போது கடைசி நிமிடம் வரை சின்ன பொண்ணு அல்லது அபிஷேக் தான் குறைந்த ஓட்டு பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் வெளியேற போவதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் நாடியா சாங் வெளியேறினார்.

    English summary
    In Bigg boss 5 tamil, including priyanka four contestants are in danger zone. priyanka, abishek raaja, chinna ponnu, abinay are in dancer zone. fans asked whether abishek or any other will walk out from the house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X