Don't Miss!
- News காத்திருக்கும் அதிமுக.. 40 தொகுதிகளுக்கும் இன்று முதல் விருப்ப மனு வாங்கும் தேமுதிக.. என்ன நடக்குது?
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
'எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து..' - மனசு மயங்கும் இளையராஜா பாட்டு!
'ஒன்னவிட்டா யாரும் இல்ல
எங்கையில் உங்கையச் சேத்து
கைரேகை மாத்துது காத்து...'
- பாலாவின் நாச்சியார் படத்துக்காக இளையராஜா இசையில் உருவாகியுள்ள மனதை மயக்கும் டூயட் பாடல் இது. பாடலை எழுதியவர் தமிழச்சி தங்கபாண்டியன்.
பாடியவர் ஜீவி பிரகாஷ் - ப்ரியங்கா. நாச்சியார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஜீவி.
இந்தப் பாடல் பாடிய அனுபவத்தை மெய் சிலிர்க்க பகிர்ந்து கொண்டார் ஜிவி பிரகாஷ். "இந்த நாள் என் வாழ்வின் பொன்னாள். இசைஞானி இசையில் ஒரு பாடல் பாடிவிட வேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசை. இன்று அது நிறைவேறியது. மிக இனிமையா அந்தப் பாடலைப் பாட என்னை ராஜா சார் தேர்வு செய்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் என்மீது மிகுந்த அன்பு காட்டுபவர் இசைஞானி. இப்பாடல் அனைவரது மனதையும் வருடும் என்றும், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும்," என்றார்.
ஜிவி பிரகாஷ் சிறுவயதிலேயே சிக்கு புக்கு ரயிலு.. பாடல் பாடியவர். தொடர்ந்து இசையமைத்து பாடி வருகிறார். சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் மெர்சல் படத்தில் புகழ்பெற்ற 'மெர்சல் அரசன்...' பாடல் இவர் பாடியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.