Don't Miss!
- News ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கும் தேர்தல்.. முடிவு என்ன? ஜஸ்ட் மிஸ்ஸானாலும் சீனா உள்ள வந்திடுமே
- Sports இது சரிப்பட்டு வராது.. கேப்டனாக மாறிய கோலி.. சிராஜ்க்கு திட்டம் போட்டு விக்கெட் எடுத்த ஆர்சிபி
- Lifestyle உங்க உதடுகள் கொஞ்சம் கொஞ்சமா கருப்பா மாறுதா? அப்ப இந்த பிரச்சினைகளில் ஒன்று உங்களுக்கு இருக்காம்...!
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Technology கழிவறையில் "கை வைக்கும்" இந்திய ரயில்வே.. Gandhvedh என்கிற மானிட்டர்-ஐ உள்ளே இன்ஸ்டால் செய்ய முடிவு.. ஏன்?
- Automobiles ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஜீவா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 6 தேதி வெளிவருது ஜிப்ஸி.. படக்குழு அறிவிப்பு
சென்னை : ஜிப்ஸி படம் மார்ச் 6 தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ஜிப்ஸி. இந்த படத்தில் நடிகர் ஜீவா,நடாஷா சிங், லால் ஜோஸ்,சன்னி வெயின்,சுசீலா ராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார் .
ஜிப்ஸி படம் ரசிகர்களால் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் ஏனெனில் ராஜு முருகன் குக்கூ மற்றும் ஜோக்கர் என்ற இரு நல்ல படங்களை இயக்கியிருந்தார். ஜோக்கர் படம் இயக்குனர் ராஜு முருகனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
இதனாலே ரசிகர்கள் இவரின் ஜிப்ஸி படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து வந்தனர். ஜிப்ஸி படம் ஒரு ஆண்டுக்கு முன்பே முழுமையாக முடிவடைந்து விட்டது ஆனால் படத்தில் வைக்கபட்டிருந்த காட்சிகளும் வசனங்களும் சென்சாரில் பலமுறை நிராகரிக்க பட்டு படம் தொடர்ந்து தாமதமாகி வந்தது. ஒரு வருடமாக இப்போது வரும் அப்போது வருமென எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஒரு வழியாக மார்ச்6 வெளியாகும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ராஜுமுருகன் மற்றும் படக்குழு இணையத்தில் ஒரு சிவப்பு நிற போஸ்டரின் மூலம் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த போஸ்டரில் ஜீவா மட்டும் இடம்பெற்றிருக்கிறார் .
பொதுவாக இந்திய சினிமாக்களில் அரசியல் விமர்சன படங்கள் வருவது தொடர் பிரச்சனைகளே சந்தித்து வருவது இயல்பான விசயம்.இதில் சிறிய படங்கள் மட்டுமல்லாமல் பல பெரிய ஹீரோக்களின் படங்களே மாட்டி தவித்து இருக்கின்றனர் .
உலகநாயகன் கமலஹாசனின் பல படங்கள் இவ்வாறு பல போராட்டங்களுக்கு பிறகே மக்களை அடைந்தது வரலாறு. இந்தியா மட்டுமில்லை பல நாடுகளில் படங்களில் கடுமையாக அரசியல் பேசுவதையும் விமர்சிப்பதையும் அரசாங்கம் விரும்புவது இல்லை .இதற்கான சரியான தீர்வை நோக்கி பல வருடங்களாக சினிமா பயணித்து கொண்டேதான் இருக்கிறது .
தற்போதாவது மார்ச் 6 சொன்னபடி படம் வெளியாகுமா என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர். படக்குழு உறுதியாக மார்ச் 6 ஜிப்ஸி படம் வரும் என்று உறுதியளித்துள்ளது. முக்கியமாக நடிகர் ஜீவா இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஜீவா இன்னும் ஒரு முழுமையான வெற்றி படத்திற்கு காத்திருக்கிறார் என்பது உண்மை மார்ச் 6 என்ன நடக்கபோகிறது என்பதனை பொருத்திருந்து பார்போம்.