Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இஸ்தான்புல் தாக்குதல்: உயிர்தப்பிய பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்
மும்பை: துருக்கி தலைநகர் இஸ்தான்புல் விமானநிலையத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் உயிர் தப்பியுள்ளார். தனக்கு உதவிய நல்ல உள்ளங்கள், விமானப்படை ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் மகன்களுடன் துருக்கிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று நாடு திரும்புவதற்காக இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு அவர் வந்திருந்தார். அவர் பயணம் செய்யவிருந்த விமானத்தைத் தவறவிட்ட நிலையில் அடுத்த விமானத்திற்காக காத்திருந்தார். மறுநாள்தான் விமான பயணம் என்று முடிவு செய்திருந்த நிலையில் திடீரென வேறு விமானத்தில் அவர்கள் நாடு திரும்பினர்.
missed connecting flight at Istanbul n wer stuck at airport next flight ws next day,but took economy n flew out earlier. #Prayers4istanbul
— Hrithik Roshan (@iHrithik) June 28, 2016
ஹிருத்திக் ரோசன் விமானம் ஏறிய சில மணிநேரங்களிலேயே இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 36 அப்பாவி மக்கள் பலியாகினர்.
Ws helped by d kindest staff at Istanbul arport hours ago. Shocking news. Innocents killed 4 religion.V must stand united against terrorism.
— Hrithik Roshan (@iHrithik) June 29, 2016
நாடு திரும்பியதும் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான நிலையப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்தான்புல் தாக்குதலில் இறந்தவர்கள்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தீவிரவாதத்திற்கு எதிராக ஒருமித்த குரலில் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.