Don't Miss!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- News
காதலுக்கு எல்லை கிடையாது.. கடல் கடந்த காதல்.. ஹாங்காங் பெண்ணை மணந்த புதுக்கோட்டை இளைஞர்
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Finance
அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நான் தலைமறைவா? அடப்பாவிகளா.. கோயிலுக்கு போயிருந்தேன்யா.. கிளப்பிவிட்டாய்ங்க.. பிரபல நடிகர் விளக்கம்!
சென்னை: தான் தலைமறைவானதாக வெளியான தகவலுக்கு நடிகர் வடிவேலு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு.. தன்னைத்தானே டேமேஜ் செய்து கொண்டு மக்களுக்கு சிரிப்பு மருந்து கொடுக்கும் சிறந்த நடிகர். இவரது காமெடிகள் யார் மனதையும் சட்டென புண்படுத்திவிடாது.
இவரது பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரிக்கு என ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நடிகர் வடிவேலு.

தலைவன் இருக்கின்றான்
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததற்காக புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

தயாரிப்பாளர் சதீஷ்
ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் தனக்கு அந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார்.

வடிவேலுவால் நஷ்டம்
வடிவேலுவை வைத்து படம் எடுப்பதற்காகவே தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாகவும் அவர் நடித்த எலி படத்தினால் தனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் வடிவேலு 2 படங்களில் நடித்துக்கொடுப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

போலீஸில் புகார்
ஆனால் நடிகர் வடிவேலு கூறியப்படி நடந்துகொள்ளவில்லை என்றும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார் என்றும் பரபரப்பு புகாரை கூறினார். இது குறித்து போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது.

வடிவேலு விளக்கம்
இந்நிலையில் நடிகர் வடிவேலு போலீஸ்க்கு பயந்து தலைமறைவாகி விட்டார் என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.

களங்கம் ஏற்படுத்தவும்
அதாவது தான் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை என்றும் தன்னை களங்கப்படுத்தவும், எதிர்காலத்தை வீணாக்கவும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று கூறியுள்ளர்.