பாலாவுக்காக 19 மணி நேரம் ரெக்கார்டிங்... பிரமிக்க வைத்த இசைஞானி!
பாலாவின் புதிய படத்துக்காக தொடர்ந்து 19 மணி நேரம் பாடல் உருவாக்கி பதிவு செய்து கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா.
பரதேசி' படத்திற்கு பிறகு சசிகுமாரை வைத்து இயக்குனர் பாலா தனது அடுத்த படத்தை இயக்குகிறார்.

சசிகுமார்
சசிகுமாரின் சொந்தப் படம் இது. கரகாட்டம் என தற்காலிகமாக பெயர் சூட்டியுள்ளனர்.

இசைஞானி இளையராஜா
இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜாவுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் பாலா. இதில் இடம்பெறும் 12 பாடல்களை 6 நாட்களில் முடித்துக் கொடுத்துள்ளார் இளையராஜா.

தொடர்ந்து 19 மணி நேரம்
கரகாட்டக் கலைஞர்களை மையப்படுத்தியக் கதை என்பதால் இப்படத்தில் புதுமுயற்சியாக இதுவரை திரைத்துறையில் பணிபுரியாத நாட்டுப்புற இசைக் கலைஞர்களை வைத்து காலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து 19 மணி நேரம் பாடல்களை கம்போசிங் செய்து, பதிவும் செய்துள்ளார் இளையராஜா.

கரகாட்டக்காரன்
இன்னொரு கரகாட்டக்காரன் எனும் அளவுக்கு பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாக இப்போதே பேச்சு கிளம்பிவிட்டது.
‘பரதேசி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த செழியன்தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்கவிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











