Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பாளர் மகளை எரிக்க முயற்சி-காதலர் உயிர் ஊசல்
ஹைதராபாத்: தெலுங்குப் படத் தயாரிப்பாளரின் மகளை உயிரோடு எரிக்க முயன்ற அவருடைய காதலன், தானும் தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் வெங்கடராஜு. இவர் தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
அந்தத் தயாரிப்பாளருக்கு ஒரு மகள் இருக்கிறார். டீன் ஏஜ் வயதுடைய அவருக்கும், வெங்கடராஜுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து ராஜு, தயாரிப்பாளரின் மகளை விட்டு விட்டு ஓடி விட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது வீட்டுக்குத் திரும்பி விட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு தயாரிப்பாளரின் வீட்டுக்கு ராஜு வந்தார். கையொடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டார். வீட்டில் தனியாக இருந்த தனது முன்னாள் காதலி மீதும் பெட்ரோலை ஊற்றினார். இதனால் அந்தப் பெண் உதவி கேட்டு குரல் எழுப்பினார்.
ஆனால் அதற்குள் தன் மீது தீ வைத்துக் கொண்ட ராஜு, காதலியையும் கட்டிப் பிடித்து கொல்ல முயன்றார். ஆனால் அந்தப் பெண் ராஜுவின் பிடியிலிருந்து தப்பி ஓடினார்.
இதனால் சிறியளவிலான காயத்துடன் அப்பெண் தப்பினார். ஆனால் பாதி உடம்பு எரிந்த நிலையில் ராஜூவை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரது உயிர் ஊசலாடி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.