Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வழக்கறிஞர் நந்தினிக்காக நடிகை ரோகிணி கேட்ட ஒற்றைக் கேள்வி... உண்மையிலேயே கெத்து தான்!
மது என்ன உணவு பொருளா? என நடிகை ரோகிணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: வழக்கறிஞர் நந்தினிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடிகை ரோகிணி தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. கல்லூரியில் படிக்கும் போதிருந்தே மதுவுக்கு எதிராக அவர் போராடி வருகிறார். பலமுறை சிறை சென்றுள்ளார். நந்தினியின் போராட்டத்திற்கு அவரது தந்தையும் ஆதரவாக துணை நின்று வருகிறார். இருவர் மீதும் பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு வழக்கில் ஆஜரானபோது, ஐபிசி பரிவு 328ன் படி டாஸ்மாக் மூலமாக போதைப் பொருள் விற்கப்படுவது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா? என நந்தின கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இது போன்ற கேள்விகளை எழுப்பமாட்டோம் என எழுதிக்கொடுக்க நந்தினி மறுத்ததைத் தொடர்ந்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வரும் ஜூலை 5ம் தேதி நந்தினிக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நந்தினியை விடுவிக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். டிவிட்டரில் #releasenandhi எனும் ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டிங்காகியுள்ளது.
மது உணவுபொருளா?
— Rohini Molleti (@Rohinimolleti) June 29, 2019
இந்நிலையில் நந்தினி எழுப்பிய கேள்வி சரியானது தான் என்பதை உணர்த்து வகையில், 'மது உணவு பொருளா?' என நடிகை ரோகிணி தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய இந்த கேள்விக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா உள்ள தூக்கி போடற போறாங்க
— விக்னேஷ் துரை (@aTnuPB5VNcZ4nx2) June 29, 2019
'ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா உள்ள தூக்கி போட்ற போறாங்க' என ஒருவர் ரோகிணியை எச்சரித்துள்ளார். மது உணவலல உயிர்கொல்லி என சிலர் பதில் அளித்துள்ளனர். நந்தினி விவகாரத்தில் முக்கிய நடிகர், நடிகைகள் வாய்த்திறக்காமல் மௌனம் சாதிக்கும் வேளையில், ரோகிணியின் துணிச்சலை பலரும் பாராட்டியுள்ளனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
ஊரே இளையராஜா பாட்டு கேட்கும்.. ஆனால் அவரோ.. இயக்குநர் சொன்ன சுவாரஸ்யமான விஷயம்
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்