Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆஹா...இது செம ட்விஸ்டா இருக்கே...பணப்பெட்டியுடன் வெளியேறியவர் இவர் தானா ?
சென்னை : பிக்பாஸில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை எபிசோடில் ரூ.3 லட்சம் பணம் இருக்கும் சூட்கேசுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார் சரத்குமார். புத்திசாலிதனமாக முடிவெடுக்கவும் சொல்லி விட்டு சென்றார்.
Recommended Video
தொகை குறைவாக இருந்ததால் போட்டியாளர்கள் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் நேற்று காலை ரூ.5 லட்சமாக இந்த தொகை உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு போட்டியாளர்கள் சிலரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அனைவரும் இது பற்றி பேச துவங்கினர்.
ஹேப்பி பர்த் டே ஏ.ஆர்.ரஹ்மான்...ஆஸ்கார் நாயகன் பற்றி யாரும் அறியாத அரிய தகவல்கள் இதோ
படிப்படியாக உயர்ந்த தொகை
இந்நிலையில் நேற்று தொடர்ந்து இந்த தொகை 6 லட்சம், 7 லட்சம், 9 லட்சம் என படிப்படியாக உயர்த்தப்பட்டது. பணப்பெட்டியை வைத்தே இரண்டு எபிசோட்களை முடித்து விட்டீர்களே என நெட்டிசன்கள் கலாய்த்ததாலோ, இல்லை சண்டை இல்லாமல் சுவாரஸ்யம் குறைகிறது என நினைத்ததாலோ நேற்றைய எபிசோடில் லக்சுரி பட்ஜெட் டாஸ்க், இறுதிப் போட்டிக்கு உங்களை உறுதி செய்வதற்கு என சொல்லி இரண்டும் கலந்த ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது.
புது டாஸ்க்
இதனால் வீட்டில் சண்டை, வாக்குவாதம் உள்ளிட்டவைகள் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கம் போல் நிரூப்பிற்கு எதிராக அனைவரும் பேசினர். நிரூப் - பிரியங்கா சண்டை நடைபெற்றது. ராஜுவும் வழக்கம் போல் சண்டையில் தலையிடாமல் அமைதி காத்தார்.
பிளான் பண்ணிய பிரியங்கா
இதற்கிடையில் பணப்பெட்டியை யார் எடுப்பது என போட்டியாளர்கள் பேசி வந்தனர். பெரிய தொகையாக வந்தால் தானே எடுத்துக் கொண்டு வெளியேற உள்ளதாக பிரியங்கா சொன்னார். தொகை எவ்வளவு உயர்கிறது என பார்க்கலாம் என அமீரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா.
மூவரில் யார்
பணத்தை தாமரை அல்லது பாவனி எடுக்க தான் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. எல்லோரிடமும் கருத்து கேட்டு வந்ததால் கடைசியில் நிரூப் தான் எடுக்க போகிறார் எனவும் சிலர் எதிர்பார்த்தனர். பரிசுத் தொகை ரூ.25 லட்சம் வரை உயர்த்தப்படும் என நிரூப் சொல்லி இருந்தார். 15 லட்சம் வைத்தால் தான் யோசிப்பதாக பாவனியும் கூறி இருந்தார்.
இவர் தான் எடுத்தாரா
லேட்டஸ்ட் தகவலின்படி நேற்று இரவு இந்த தொகை ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுவரை யாரும் எதிர்பார்க்காத விதமாக சிபி அந்த பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளதாம்.