Don't Miss!
- News
WFH ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்? வருகிறதா சிறப்பு "அலொவன்ஸ்!" அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன்?
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்.. பிரசவ அறை, கை குழந்தை, தாய் மரணம், இண்டர்வியூவ் மத்தியில் பணிநீக்கம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விஜய் ரசிகர்களை சந்தித்ததற்கு இதுதான் காரணம்? உண்மையை புட்டு புட்டு வைத்த எஸ்.ஏ.சி!
சென்னை : தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், விஜய் திடீரென ரசிகர்களை சந்தித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தளபதி
67
பூஜைக்கு
நாள்
குறித்த
லோகேஷ்…
வெறித்தனமாக
ரெடியாகும்
விஜய்…
அந்த
டைட்டில்
டீசர்..?

வாரிசு
தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் வாரிசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதால் படத்திற்கு சிக்கல் எழுந்தது.

நிர்வாகிகளுடன் சந்திப்பு
இந்த பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டிருந்த போது, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் விஜய் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில், மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை விஜய் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, ரசிகர்களுடன் விஜய் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மூன்று வருடத்திற்கு ஒருமுறை
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், விஜய் இதற்கு முன்பு 3 வருடத்திற்கு ஒரு முறை ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பார். அப்போது எல்லாம் ரசிகர்கள் வருவார்கள் போட்டோ எடுப்பாங்க போய்விடுவாங்க. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பிரேக் இல்லாமல் நின்று கொண்டே ரசிகர்களுடன் போட்டோ எடுப்பார்.

இதுதான் காரணம்
குறைத்தது 2 கோடி ரசிகர்களின் வீட்டிலாவது உன் போட்டோ இருக்க வேண்டும் என்று நான் கூறுவேன். தற்போது விஜய் ரசிகர்களை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் அது பேசப்படுகிறது. ஆனால், முன்பு இதைவிட அதிக அளவில் விஜய்யை ரசிகர்களை சந்தித்து உள்ளார். ரசிகர்களை சந்திப்பதை ஒரு இலக்காகவே விஜய்யிடம் சொல்லியிருக்கேன். அதைத்தான் இப்போதும் விஜய் செய்துள்ளார்.

ஆன்மீக பயணம்
இமயமலை, கேதார்நாத் போன்ற இடங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்தேன் இது நல்ல அனுபவமாக இருந்தது. சினிமா தான் என் மூச்சு, ஏதாவது ஒரு உருவத்தில் சினிமாவில் இருக்க வேண்டும் அதுதான் என் ஆசை என்றார். அண்மையில் இவர் அஜித்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் என்ஃபீல்டு பைக்குடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.