என் கனவு நிறைவேற 22 ஆண்டுகளாகிடுச்சு: குஷ்பு ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: நடிகை குஷ்புவின் கனவு நிறைவேற 22 ஆண்டுகள் ஆகியுள்ளது.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் வெனிஸ் நகருக்கு சென்றுள்ளார். கோடை விடுமுறையை கழிக்க அவர் குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார்.
வெனிஸ் நகரில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கனவு
ஒரு ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, கனவுகள் நிஜமாகும்...என் கணவருடன் கொன்டோலில் பயணிக்கும் என் கனவு ஒரு வழியாக நிறைவேறியுள்ளது. இந்த கனவு நிறைவேற 22 ஆண்டுகள் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குடும்பம்
கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் ரிலாக்ஸாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
குஷ்பு
குஷ்பு
தன் தோழமையான
கணவருடனும்
தன் தேவதைகளான
மகள்களுடனும்
கோடை வெயிலினை தணிக்கும்
தங்களது இன்ப சுற்றுலா
இனிதே சிறக்க வாழ்த்துக்கள் என ஒருவர் குஷ்புவை வாழ்த்தியுள்ளார்.
சிறப்பு
குஷ்பு தனது குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர், சிறப்பு மிக சிறப்பு என கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











