Don't Miss!
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
முத்தக் காட்சிகளில் நடித்து முடிப்பதற்குள் வெட்கம் பிடுங்கித் தின்னும்: காஜல்
ஹைதராபாத்: காதல் காட்சிகளில் நடிக்க வெட்கம் வெட்கமாக இருப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வால் ஒரே நேரத்தில் தல அஜீத் மற்றும் விஜய் படத்தில் நடித்து வருகிறார். கைதி எண் 150 படம் ஹிட்டானதற்கு பிறகு தெலுங்கிலும் மார்க்கெட் பிக்கப்பாகி சூப்பராக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காதல் காட்சிகளில் நடிப்பது குறித்து காஜல் கூறுகையில்,
முத்தம்
காதல் காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பது குறித்து ஒரு காலத்தில் பரபரப்பாக பேசினார்கள். ஆனால் தற்போது அது சர்வ சாதாரணமாகிவிட்டது.
நடிகைகள்
முத்தம் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க தற்போதைய நடிகைகளும் தயங்குவது இல்லை. அந்த காட்சிகளை ரசிகர்களும் சாதாரண காட்சிகளை போன்று பார்க்கிறார்கள்.
கஷ்டம்
காதல் மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பது எளிது அல்ல. படக்குழுவுக்கு முன்பு குட்டி குட்டியாக உடை அணிந்து ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க வேண்டும்.
வெட்கம்
முத்தக் காட்சிகளில் நடிப்பது பற்றி சொல்லவே தேவையில்லை. படக்குழுவுக்கு முன்பு ஹீரோவுக்கு முத்தம் கொடுப்பதற்குள் வெட்கம் பிடுங்கித் தின்னும். இதில் படப்பிடிப்பை பார்க்க ரசிகர்கள் வந்தால் கூச்சம் அதிகமாகும். நான் காதல் மற்றும் முத்தக் காட்சிகளில் நடிக்க கஷ்டப்படுகிறேன். அந்த காட்சிகளில் நடிக்க வெட்கம் வெட்கமாக இருக்கிறது என்றார் காஜல்.