Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மகளுடன் நடிக்கும் புதிய படம்... நடிகர் சங்க நிலத்தில் பூஜை போடும் கமல்
சென்னை: நடிகர் சங்க நிலத்தில் தன்னுடைய அடுத்த படத்தின் துவக்க விழா நடைபெறும் என கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.
கமல்- ஸ்ருதிஹாசன் முதன்முறையாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 29 ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் படத்தின் தொடக்க விழாவை நடிகர் சங்க நிலத்தில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் 'ராஜ்கமல் நிறுவனத்தின் 41 வது படத்தை எங்களுடைய குடும்ப இடமான நடிகர் சங்க நிலத்தில் துவங்குகிறோம்.
நடிகர் சங்கத்துக்கு நன்றி' என்று தெரிவித்திருக்கிறார். கமலின் இந்த அறிவிப்பு நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் நடிகர் சங்க நிலத்தில் துவங்குவதால் இப்பட பூஜையில், கோலிவுட்டின் ஒட்டுமொத்த நடிக, நடிகையரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.