Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
அதை மட்டும் சொல்லிடாதீங்க!- கார்த்திக் சுப்பராஜின் வேண்டுகோள்
சென்னை: இறைவி படத்தைப் பார்க்கும் யாரும் தயவு செய்து கதையை அல்லது க்ளைமாக்ஸை மட்டும் வெளியில் சொல்லிவிட வேண்டாம் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி, கமலினி முகர்ஜி ஆகியோர் நடித்த இறைவி படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் நேற்று வெளியானது.
கார்த்திக் சுப்பராஜின் முதல் இரு படங்களுக்கும் இல்லாத நல்ல ஓபனிங் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், மீடியா மற்றும் படம் பார்த்தவர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், "இதுவரை என் படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்து வந்த அனைவருக்கும் நன்றி. இறைவி படத்தின் கதை மற்றும் க்ளைமாக் காட்சிகள் குறித்து வெளியில் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு அது உதவும் என்பதால் உங்கள் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.