Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நந்தினி அடியாட்களை வைத்து என் மகனை மிரட்டினார்: கார்த்திக்கின் தாய் புகார்
சென்னை: நந்தினி என் மகனின் அழகில் மயங்கி அவரை எப்படியும் திருமணம் செய்தே தீர வேண்டும் என்று அடியாட்களை அனுப்பி மிரட்டினார். நந்தினி என் மகனை மிரட்டி திருமணம் செய்தார் என கார்த்திக்கின் தாய் சாந்தி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்யும் முன்பு இந்த முடிவை தான் எடுக்க தனது மாமனார் ராஜேந்திரன் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
சாந்தி
தன் மகன் தற்கொலை செய்து கொள்ள அவரின் மாமனார் ராஜேந்திரன் மற்றும் மனைவி நந்தினியின் டார்ச்சரே காரணம் என கார்த்திக்கின் தாய் சாந்தி போலீசில் புகார் அளிக்கிறாராம்.
மிரட்டல்
நந்தினி என் மகனின் அழகில் மயங்கி அவரை எப்படியும் திருமணம் செய்தே தீர வேண்டும் என்று அடியாட்களை அனுப்பி மிரட்டினார். நந்தினி என் மகனை மிரட்டி திருமணம் செய்தார் என்கிறார் சாந்தி.
நந்தினி
என் மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்தும் நந்தினி அதை கண்டுகொள்ளவில்லை. என் மகனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கக் கூட வரவில்லை என்று சாந்தி தெரிவித்துள்ளார்.
விட மாட்டேன்
என் மகன் தற்கொலை செய்து கொள்ள காரணமான நந்தினி மற்றும் அவரின் தந்தை ராஜேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன் என்று சாந்தி கூறியுள்ளார்.