Just In
- 8 min ago
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- 17 min ago
மீண்டும் இணையும் திரில்லர் கூட்டணி.. 'ஏவி31' படப்பிடிப்பு ஆரம்பம்
- 25 min ago
'கில்லி'ல நடிச்சது...15 வருடத்துக்குப் பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!
- 13 hrs ago
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
Don't Miss!
- News
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திறமைசாலிகளுடன் வேலை செய்ய வாய்ப்பளித்த பா. ரஞ்சித்துக்கு நன்றி.. கயல்ஆனந்தி
சென்னை: பல திறமைசாலிகளுடன் வேலை செய்ய வாய்ப்பு தந்த இயக்குநர் பா ரஞ்சித் சாருக்கு நன்றி என்று கூறியுள்ளார் நடிகை கயல் ஆனந்தி.
கயல் அனந்தி தனது ஆரம்ப படம் முதலே எதார்த்த நடிப்பை கொண்டு அனைத்து குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் வரும் இவருடைய ஜோ கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.

பரியேறும் பெருமாள் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் படம். மறுபடியும் இவர் நீலம் தயாரிப்புடன் இணைந்து படம் பண்ணுகிறார். படத்தின் பெயர் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு.
இந்த படத்தை அதியமான் ஆதிரை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் கயல் ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த், லிஜிஷ், ஜான் விஜய், நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடந்தது.

இந்த பிரஸ் மீட்டில் அட்டகத்தி தினேஷ், கயல், முனிஷ்காந்த், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் பலர் பங்கு பெற்றனர். அப்போது கயல் ஆனந்தி தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
கிளாமர் திருவிழா.. ஆலியா பட் முதல் அனுஷ்கா ஷர்மா வரை.. ஃபிலிம்ஃபேர் விருது பெற்றவர்கள் பட்டியல்!
அவர் கூறுகையில், நீலம் என்னோட ஹோம் புரொடக்ஷன் மாதிரி. இந்த நிறுவனத்திலிருந்து போன் பண்ணா நான் ஸ்கிரிப்ட் எதுவும் கேக்காம படம் பண்றதுக்கு ரெடி. இவங்க தேர்வு பண்ற ஸ்கிரிப்டில் அந்த அளவு ஸ்ட்ராங் கன்டென்ட் இருக்கும். பா ரஞ்சித் சாருக்கு நன்றி. பல திறமைசாலி கூட வேலை செய்ய வாய்ப்பு தந்தாங்க. டைரக்டர் அதியமான் சார் ஒரு நல்ல மனிதர் என்றார்.