Don't Miss!
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
ஜூன் 12, 2003
கணவர் மீது போலீசில் கே.ஆர்.விஜயா மகள் புகார்
சென்னை:
நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் தனது கணவரிடம் இருந்து பாதுகாப்பு கோரி போலீசாரிடம் புகார்தந்துள்ளார்.
கே.ஆர். விஜயா- வேலாயுதன் நாயர் தம்பதிக்கு ஒரே மகள் தான். அவரது பெயர் ஹேமா (வயது 34). இவருக்கும்அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பிரேமுக்கும் 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சென்னை மதுரவயலில் இவர்கள் வசித்து வருகின்றனர். ஹேமாவுக்கும் பிரேமுக்கும் தகராறு இருந்து வந்ததாகத்தெரிகிறது. இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் ஹேமா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
மதுரவயல் போலீசாரிடம் அவர் கொடுத்துள்ள புகாரில், தனது கணவர் பிரேதம் தன்னைக்கொடுமைப்படுத்துவதாகவும் அவரிடமிருந்து பாதுகாப்பு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பணம் கேட்டு அடிக்கடி ஹேமாவை பிரேம் மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. கே.ஆர். விஜயாவும் அவ்வப்போதுமகளுக்கு பணம் தந்து வந்துள்ளார். மேலும் கணவரை விட்டு இதற்கு முன்பும் ஹேமா பிரிந்து வந்ததாகவும்கே.ஆர். விஜயா தான் பேசி இருவரையும் சேர்த்து வைத்ததாகவும் தெரிகிறது.
இப்போது மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஹேமா. ஆனால், தனது தாயார் கே.ஆர். வீட்டுக்கும்அவர் செல்லவில்லை என்று தெரிகிறது. அங்கு சென்றால் மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்துவிடுவார்கள்என்பதால், அதைத் தவிர்க்கவே கே.ஆர். விஜயாவிடம் ஹேமா செல்லவில்லை என்று கூறப்படுகிறது.