முடிஞ்சா இவன புடி... கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கிச்சா சுதீப்!
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்தப் படத்துக்கு முடிஞ்சா இவன புடி என தலைப்பிட்டுள்ளனர்.
நான் ஈ படத்தின் மூலம் தமிழில் புகழ்பெற்றவர் சுதீப். கன்னடத்தில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.

இவர் தனது அடுத்த படத்தை நேரடி தமிழ் மற்றும் கன்னடப் படமாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார்.
சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சமீபத்தில் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
லிங்கா படத்துக்குப் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மிகக் கவனத்துடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











