Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாமியாருக்காக ஐநா பயணத்தை ரத்து செய்தார் குஷ்பு!
நைரோபியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்ற நடிகை குஷ்புவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மகளிர் முன்னேற்றம் என்ற தலைப்பில் அவர் உரையாற்றவிருந்தார்.
தற்போது தனது மாமியாருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஐ.நா பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த மாநாட்டுக்காகவே சங்கரன்கோயில் பிரச்சாரத்தை அவசர அவசரமாக முடித்து சென்னை திரும்பினார் குஷ்பு.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், "என் குடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.நா. மாநாட்டுக்கு செல்ல முடியவில்லை. எனது மாமியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வருகிற 15-ந் தேதி வாக்கில் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
கடந்த சனிக்கிழமை ஆஞ்சியோகிராம் நடந்துள்ளது. எனக்கு குடும்ப பொறுப்புகள்தான் முதலில். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
மாமியார் உடல் நலக்குறைவாக இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் ஐ.நா. சபை மாநாட்டுக்கு செல்வது என்பது இயலாத காரியம். மாநாட்டில் பங்கேற்க இயலாத நிலை குறித்து ஏற்கனவே ஐ.நா. சபைக்கு கடிதம் அனுப்பி விட்டேன்.
ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க எதிர்காலத்தில் வாய்ப்பு கிட்டலாம். ஆனால் மாமியாருக்கு உதவியாக அவர் பக்கத்தில் இருப்பதுதான் இப்போது எனக்கு முக்கியம்'' என்று கூறியுள்ளார்.