Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு அடுத்து ரிலீஸுக்காக பல திரைப்படங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும் பல புது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் ஆரி அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் திரில்லர் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
இதன் பட பூஜை சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்ற நிலையில் அதில் இப்பொழுது வில்லனாக ஆட்டோ ஷங்கர் பட புகழ் நடிகர் ஷரத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
16 கோடி ஓட்டுக்களை
திறமையான நடிகராக இருந்தும் தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்த ஆரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து அதில் வெற்றியாளராக மகுடம் சூடினார். தமிழில் இதுவரை நடந்த 3 சீசன்களில் இல்லாத அளவிற்கு தனி ஒரு ஆளாக 16 கோடி ஓட்டுக்களை வாங்கிக் குவித்து உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் பெருகிப் போக ஏற்கனவே நடித்திருந்த பல படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இப்பொழுது வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதிகாரியாக
அந்த வகையில் பகவான் மற்றும் அலேகா போன்ற திரைப்படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வர, பிக்பாஸ் நிகழ்ச்சி பின் ஆரிக்கான ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு பெருகி இருப்பதைப் போலவே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் கையில் போலீஸ் அதிகாரியாக முதல்முறையாக நடிக்கும் ஆரி அந்த படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற அதில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
நடிகை வித்யா பிரதீப்
ஷவுரியா புரொடக்ஷன்ஸ் மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப் ஒப்பந்தமாகி இருக்க படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கப்பட உள்ளது.
Recommended Video
சூப்பரான திரில்லர் திரைப்படம்
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் ஷரத் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செக்கச்சிவந்த வானம், சண்டைக்கோழி 2, அங்கமலே டைரீஸ் மற்றும் ஆட்டோ சங்கர் சீரிஸ்களில் நடித்து பிரபலமான ஷரத் இதில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்க விரைவில் ஒரு சூப்பரான திரில்லர் திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.