Just In
- 28 min ago
காடன் படம் நடிச்ச கையோடு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நடிகர் ராணா டகுபதி கலகல பேட்டி!
- 33 min ago
வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி!
- 1 hr ago
ரஜினியுடன் அந்தப் படத்தில் நடித்து 33 வருஷம் ஆச்சு.. பழைய போட்டோக்களை பகிர்ந்த சீனியர் நடிகை!
- 1 hr ago
650 கோடி விவகாரம்.. அனுராக், டாப்சியை வச்சு விளாசும் கங்கனா ரனாவத்.. வேற யாரும் வாயே திறக்கல!
Don't Miss!
- Finance
வார இறுதியிலும் வீழ்ச்சியில் தான் முடிவு.. சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிவு..!
- News
100 நாட்களை தொட்ட விவசாய போராட்டம்.. கையில் எடுக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம்.. மார்ச் 8ல் விவாதம்
- Automobiles
லண்டனே பின்னால்தான்... கெத்து காட்டும் கொல்கத்தா... மம்தா அரசின் நடவடிக்கையால் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை!!
- Lifestyle
மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..!
- Sports
ஜெர்ஸி நம்பரில் இப்படி ஒரு விளையாட்டா.... குறும்புக்கார ஹர்பஜன்... உண்மையை உடைத்த லக்ஷ்மணன்
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு அடுத்து ரிலீஸுக்காக பல திரைப்படங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும் பல புது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் ஆரி அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் திரில்லர் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
இதன் பட பூஜை சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்ற நிலையில் அதில் இப்பொழுது வில்லனாக ஆட்டோ ஷங்கர் பட புகழ் நடிகர் ஷரத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

16 கோடி ஓட்டுக்களை
திறமையான நடிகராக இருந்தும் தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்த ஆரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து அதில் வெற்றியாளராக மகுடம் சூடினார். தமிழில் இதுவரை நடந்த 3 சீசன்களில் இல்லாத அளவிற்கு தனி ஒரு ஆளாக 16 கோடி ஓட்டுக்களை வாங்கிக் குவித்து உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் பெருகிப் போக ஏற்கனவே நடித்திருந்த பல படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இப்பொழுது வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

அதிகாரியாக
அந்த வகையில் பகவான் மற்றும் அலேகா போன்ற திரைப்படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வர, பிக்பாஸ் நிகழ்ச்சி பின் ஆரிக்கான ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு பெருகி இருப்பதைப் போலவே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் கையில் போலீஸ் அதிகாரியாக முதல்முறையாக நடிக்கும் ஆரி அந்த படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற அதில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

நடிகை வித்யா பிரதீப்
ஷவுரியா புரொடக்ஷன்ஸ் மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப் ஒப்பந்தமாகி இருக்க படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கப்பட உள்ளது.

சூப்பரான திரில்லர் திரைப்படம்
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் ஷரத் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செக்கச்சிவந்த வானம், சண்டைக்கோழி 2, அங்கமலே டைரீஸ் மற்றும் ஆட்டோ சங்கர் சீரிஸ்களில் நடித்து பிரபலமான ஷரத் இதில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்க விரைவில் ஒரு சூப்பரான திரில்லர் திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.