வெளி நாட்டில் மணிரத்னம் மகனிடம் திருட்டு!
இத்தாலி சென்ற இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தனின் பணம், பொருட்களை யாரோ திருடிவிட்டதால், அவர் ஓட்டலுக்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளார்.
இத்தாலியில் உள்ள வெனிஸ் நகருக்குச் சென்றார் நந்தன். வழியில் பெலன்னோ என்ற இடத்தில் அவரிடமிருந்த பணம், உடைமைகள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர் வெனிஸ் நகருக்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளார். விஷயம் அறிந்ததும், நந்தனின் தாயார் நடிகை சுஹாசினி ட்விட்டரில் தன் மகனின் நிலையைச் சொல்லி, யாராவது அவசரமாக உதவிக்கு வர முடியுமா? என கேட்டிருந்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் நந்தனுக்கு தேவையான உதவி கிடைத்துவிட்டதாம். இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்தி, நன்றி தெரிவித்திருந்தார் சுஹாசினி.


Click it and Unblock the Notifications











