Don't Miss!
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- News போரூர் பக்கம் போறீங்களா? அப்போ உங்களுக்கு நல்ல செய்தி.. வந்தது சூப்பர் வசதி!
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என் தாயே இறந்து போய் விட்டார் - நடிகர் மனோபாலா கண்ணீர்
சென்னை: என் தாயே இறந்து போய் விட்டார். இனிமேல் யார் இருக்கிறார் எங்களுக்கு என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா.
மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய மனோபாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், கடைசி வரை நடிப்பை விடாமல் தொடர்ந்தவர் ஆச்சி மனோரமா. மாலையிட்ட மங்கை தொடங்கி கடைசி வரை அவர் நடித்த படங்கள் அனைத்திலும் விதம் விதமாக நடித்து அனைவரையும் மகிழ்வித்தவர் அவர்.
அவரைப் போல ஒரு நடிகை இனிமேல் கிடைக்க மாட்டார். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறி விடும் சிறப்பு பெற்றவர் மனோரமா.
கடைசி முறையாக என்னைப் பார்த்தபோது கூட மனோ மனோ என்று பாசமாக அழைத்து மகிழ்ந்தார். அனைவருடனும் பாசமாக பழகக் கூடியவர் மனோரமா.
மரணமடையும் முன்பு தனது தாயின் படத்தைப் பார்த்துள்ளார் மனோரமா. அப்படியே அவரது உயிர் பிரி்ந்துள்ளது. மனோரமாவின் தாயார் உயிருடன் இருக்கும்போது மனோரமா ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும் வரை வாசலிலேயே அமர்ந்திருப்பார் அவரது தாயார்.
எனது அம்மா இறந்து விட்டது போலவே உணர்கிறேன். இனிமேல் எங்களுக்கெல்லாம் யார் இருக்கிறார் என்று கண்ணீர் மல்கக் கூறினார் மனோபாலா.