பூந்தமல்லியிலும் ஈசிஆரிலும் கபாலிக்காக உருவாகும் பிரமாண்ட அரங்குகள்!
ரஜினியின் கபாலி படத்தின் ஷூட்டிங்குக்கான பணிகள் பரபரவென நடந்து வருகின்றன.
முதல் கட்ட படப்பிடிப்பு வருகிற 17-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. ஏவிஎம்மில் பூஜை முடிந்த பிறகு முதல் காட்சி சென்னை விமான நிலையத்தில் நடைபெறுகிறதாம்.

தொடர்ந்து சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இதற்காக பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஸ்டூடியோ மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டூடியோ ஆகியவற்றில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பூந்தமல்லியில் உள்ள ஈவிபி அரங்கில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதால், இங்கே ரஜினிக்கென தனி கெஸ்ட் அவுஸே ரெடி பண்ணி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











